சுற்றுச் சூழல் . நாடாள்வோர். மீடியா. சுநாமீ!
ஒவ்வொரு எழுத்துக்குப் பின்னாலும் நமது சமூகத்தின் மூன்று முக்கியமான பிரிவுகளும் அவற்றின் சீரழிவுகளும் அடங்கியிருக்கின்றன.
கடல் கொந்தளிப்பின் பேரழிவில் உயிரிழந்த ஆயிரக்கணக்கானோரிலும் வீடிழந்த லட்சக்கணக்கானோரிலும் பெரும்பாலோர் கடல் தொழிலாளிகளானமீனவர்கள்தான். பழவேற்காடு முதல் குமரி முனை வரை குப்பம் குப்பமாகக் காணாமல் போனது ஏன் ? உச்ச நீதிமன்றம் கடல் அலைப் பகுதியிலிருந்துஅரை கிலோ மீட்டர் வரை கரையில் எந்தக் கட்டடமும் கட்டக் கூடாது என்று அளித்த உத்தரவை மத்திய அரசும் மாநில அரசுகளும் துளியும்மதிக்காததே காரணம். பண முதலைகளின் கடலோர பங்களாக்களுக்காகவும் பணக்கார சுற்றுலாப்பயணிகளின் கேளிக்கைக்கான கடல்புரஓட்டல்களுக்காகவும் மீனவர் குப்பங்கள் எப்போதோ விழுங்கப்பட்டு விட்டன. அவர்கள் வாழ்ந்த இடங்களை விட்டு மேலும் கடலின் விளிம்புக்கருகேசென்று வசிக்கத் துரத்தப்பட்டார்கள்.
![]() அப்படி நடந்திராமல் இருந்திருந்தால், இல்லாவிட்டால் தற்போது உயிர் சேதமும் பொருள் சேதமும் மிகக் கணிசமாகக் குறைந்திருக்கும். கல்பாக்கமும் கூடன்குளமும் சேது கால்வாயும் எப்படிப்பட்ட எதிர்கால ஆபத்துகள் என்பதை இந்த சுநாமீ உணர்த்தியிருக்கிறது. கதிர்வீச்சு பற்றிவழக்கமாக பொய்யும் அரை உண்மைகளும் மட்டுமே பேசும் அணு சக்தி உயர் அதிகாரிகளால் கூட, கல்பாக்க அணு உலைக்குள் கடல் புகுந்ததைமறைக்க முடியவில்லை. புதிதாகக் கட்டப்பட்டு வரும் உலையில் எதிர்காலத்தில் கதிரியக்கம் நடத்தப்பட வேண்டிய மையப்பகுதிக் கட்டுமானம் கூட கடல்தண்னீரில் மூழ்கியிருக்கிறது. கூடன்குளம் உலையிலிருந்து பல கிலோ மீட்டர் தூரம் கடலுக்கு வெட்டப்பட்டுள்ள கால்வாய் வழியே கடல் நீர் புகுந்துதான்வழியெங்கும் ஏழைகள் வாழ்க்கையை அழித்திருக்கிறது. சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவது பற்றி இனியும் தீவிரம் காட்டுவோர் யாரானாலும், அவர்கள் மக்கள் விரோதிகள் என்றேவரலாற்றில் குறிக்கப்படுவார்கள். சேது கால்வாய் வெட்டப்பட வேண்டிய பகுதியின் இருபுறமும் சுநாமீ பேரழிவு செய்தது மட்டுமல்ல, கடலின் ஆழத்தில்சுநாமீயின் விளைவாக பல கணிசமான சுழிப்போக்கு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மறு ஆய்வு செய்யாமல் கால்வாய் வெட்ட விரும்புகிறவன் நர மாமிசசுவையுடையவனாக மட்டுமே இருக்க முடியும். ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கடலுக்குள் வெட்டும் கால்வாயை ஒரு நொடியில் ஒரு சுநாமீயால் தூர்த்துவிடமுடியும். நாடாள்வோரின் அத்தனை கோர முகங்களையும் இந்த சுநாமீ இன்னொரு முறை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மத்தியில் ஆட்சி செய்யும் தி.மு.கவும் ,மாநிலத்தில் ஆளும் அ.தி.மு.கவும் இந்த இயற்கைப் பேரழிவின்போதும் தங்கள் பிண அரசியலை மும்முரமாக நடத்துகின்றன. ஆயிரக்கணக்கானோர்இறந்திருக்கும் வேளையில் ஒரு தலைவர் இறந்து விட்டாரா இல்லையா என்ற சர்ச்சையை மீடியா விவாதிக்க வேண்டிய விஷயமாக மாற்றும் கேவலஆற்றல் இந்தக் கட்சிகளுக்கு மட்டுமே உரியது. கோடிக்கனக்கான ரூபாய்களை இப்போது நிவாரண நிதிக்கு அள்ளித் தரும் இந்தக் கட்சிகளுக்கு இந்தப் பணம் முதலில் எப்படி சேர்ந்தது என்று நாம் யோசிக்கவேண்டும். தெருவெல்லாம் தேவைக்கு மேல் கார் ஓடும் விதத்தில் கார் கம்பெனிகள் கடை விரிக்க லைசன்ஸ் வழங்கிவிட்டு நெரிசலைக் குறைக்க பாலம்கட்டுவது, குடிநீரை கோலா கம்பெனிகள் உறிஞ்சிக் கொள்ள அனுமதி அளிப்பது, நதிகளை இணைக்க திட்டம் போடுவது, கடலிலே கால்வாய் வெட்டக்கற்பனை செய்வது என்று இவர்கள் போட்ட, போடும் திட்டங்களெல்லாம் சூழலைக் கெடுத்து மாசுபடுத்தி, அதில் தற்காலிக லாபம் சம்பாதிக்கும்காண்ட்டிராக்டர்களிடம் பங்கு பெறும் திட்டங்கள்தானே. பகலிலெல்லாம் கந்து வட்டி வாங்கிவிட்டு மாலையில் அன்னதானம் செய்யும் வர்த்தகரின்மனப்பான்மையிலேயே இந்த அரசியல் கட்சிகளும் இயங்குகின்றன.
|
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக


பத்திரமாக வீட்டில் உட்கார்ந்து அசட்டு டிவி நிகழ்ச்சிகளையும் இடையிடையே சுநாமீ காட்சிகளையும் பார்த்துக் கொண்டிருந்த வால்மீகி நகர், காமராஜ் நகர்,திருவள்ளுவர் நகர், பத்திரிகையாளர் காலனியினர் பாதிக்கப்படவில்லை. ஆனால் அவர்களின் உறவினர்கள்தான் தொலைபேசி அமைப்பையே நிலைகுலைத்தனர்.எழுபதுகளில் நான் நிருபராகப் பணியாற்றிய சமயங்களில் வெள்ளம், புயல் பாதிப்பில் ஒரு பகுதி பாதிக்கப்பட்டால், அதே பகுதியில் எந்தெந்த தெருக்கள்தப்பின என்று பெயரிட்டு எழுதுவது பத்திரிகைத் துறையின் தொழில் கடமையாக இருந்தது. வானொலியும் இந்த தர்மத்தை அன்று பின்பற்றியது. இன்றுமீடியா பரபரப்பை தவிர வேறெந்த அக்கறையும் கொள்வது அபூர்வமாக கிட்டும் வரமாகிவிட்டது. கலைஞர் கைதானபோது பத்து நிமிடத்துக்கொருமுறை அதை ஒளிபரப்பிய சன் டிவி, காலை முதல் மாலை வரை அவர் மரணச் செய்தி வதந்தி- போலீஸ் விஷமம் என்று சொல்லியதே தவிர, அவரைக்காட்டவில்லை. இரவில் காட்சியாகக் காட்டிய அவரைக் காலையிலேயே காட்டியிருந்தால் நாள் முழுக்க வளர்க்கப்பட்ட வதந்தியும் பொதுமக்கள்அலைக்கழிப்பும் தவிர்க்கப்பட்டிருக்கும்.











Click it and Unblock the Notifications