சுற்றுச் சூழல் . நாடாள்வோர். மீடியா. சுநாமீ!
ஒவ்வொரு எழுத்துக்குப் பின்னாலும் நமது சமூகத்தின் மூன்று முக்கியமான பிரிவுகளும் அவற்றின் சீரழிவுகளும் அடங்கியிருக்கின்றன.
கடல் கொந்தளிப்பின் பேரழிவில் உயிரிழந்த ஆயிரக்கணக்கானோரிலும் வீடிழந்த லட்சக்கணக்கானோரிலும் பெரும்பாலோர் கடல் தொழிலாளிகளானமீனவர்கள்தான். பழவேற்காடு முதல் குமரி முனை வரை குப்பம் குப்பமாகக் காணாமல் போனது ஏன் ? உச்ச நீதிமன்றம் கடல் அலைப் பகுதியிலிருந்துஅரை கிலோ மீட்டர் வரை கரையில் எந்தக் கட்டடமும் கட்டக் கூடாது என்று அளித்த உத்தரவை மத்திய அரசும் மாநில அரசுகளும் துளியும்மதிக்காததே காரணம். பண முதலைகளின் கடலோர பங்களாக்களுக்காகவும் பணக்கார சுற்றுலாப்பயணிகளின் கேளிக்கைக்கான கடல்புரஓட்டல்களுக்காகவும் மீனவர் குப்பங்கள் எப்போதோ விழுங்கப்பட்டு விட்டன. அவர்கள் வாழ்ந்த இடங்களை விட்டு மேலும் கடலின் விளிம்புக்கருகேசென்று வசிக்கத் துரத்தப்பட்டார்கள்.
![]() அப்படி நடந்திராமல் இருந்திருந்தால், இல்லாவிட்டால் தற்போது உயிர் சேதமும் பொருள் சேதமும் மிகக் கணிசமாகக் குறைந்திருக்கும். கல்பாக்கமும் கூடன்குளமும் சேது கால்வாயும் எப்படிப்பட்ட எதிர்கால ஆபத்துகள் என்பதை இந்த சுநாமீ உணர்த்தியிருக்கிறது. கதிர்வீச்சு பற்றிவழக்கமாக பொய்யும் அரை உண்மைகளும் மட்டுமே பேசும் அணு சக்தி உயர் அதிகாரிகளால் கூட, கல்பாக்க அணு உலைக்குள் கடல் புகுந்ததைமறைக்க முடியவில்லை. புதிதாகக் கட்டப்பட்டு வரும் உலையில் எதிர்காலத்தில் கதிரியக்கம் நடத்தப்பட வேண்டிய மையப்பகுதிக் கட்டுமானம் கூட கடல்தண்னீரில் மூழ்கியிருக்கிறது. கூடன்குளம் உலையிலிருந்து பல கிலோ மீட்டர் தூரம் கடலுக்கு வெட்டப்பட்டுள்ள கால்வாய் வழியே கடல் நீர் புகுந்துதான்வழியெங்கும் ஏழைகள் வாழ்க்கையை அழித்திருக்கிறது. சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவது பற்றி இனியும் தீவிரம் காட்டுவோர் யாரானாலும், அவர்கள் மக்கள் விரோதிகள் என்றேவரலாற்றில் குறிக்கப்படுவார்கள். சேது கால்வாய் வெட்டப்பட வேண்டிய பகுதியின் இருபுறமும் சுநாமீ பேரழிவு செய்தது மட்டுமல்ல, கடலின் ஆழத்தில்சுநாமீயின் விளைவாக பல கணிசமான சுழிப்போக்கு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மறு ஆய்வு செய்யாமல் கால்வாய் வெட்ட விரும்புகிறவன் நர மாமிசசுவையுடையவனாக மட்டுமே இருக்க முடியும். ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கடலுக்குள் வெட்டும் கால்வாயை ஒரு நொடியில் ஒரு சுநாமீயால் தூர்த்துவிடமுடியும். நாடாள்வோரின் அத்தனை கோர முகங்களையும் இந்த சுநாமீ இன்னொரு முறை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மத்தியில் ஆட்சி செய்யும் தி.மு.கவும் ,மாநிலத்தில் ஆளும் அ.தி.மு.கவும் இந்த இயற்கைப் பேரழிவின்போதும் தங்கள் பிண அரசியலை மும்முரமாக நடத்துகின்றன. ஆயிரக்கணக்கானோர்இறந்திருக்கும் வேளையில் ஒரு தலைவர் இறந்து விட்டாரா இல்லையா என்ற சர்ச்சையை மீடியா விவாதிக்க வேண்டிய விஷயமாக மாற்றும் கேவலஆற்றல் இந்தக் கட்சிகளுக்கு மட்டுமே உரியது. கோடிக்கனக்கான ரூபாய்களை இப்போது நிவாரண நிதிக்கு அள்ளித் தரும் இந்தக் கட்சிகளுக்கு இந்தப் பணம் முதலில் எப்படி சேர்ந்தது என்று நாம் யோசிக்கவேண்டும். தெருவெல்லாம் தேவைக்கு மேல் கார் ஓடும் விதத்தில் கார் கம்பெனிகள் கடை விரிக்க லைசன்ஸ் வழங்கிவிட்டு நெரிசலைக் குறைக்க பாலம்கட்டுவது, குடிநீரை கோலா கம்பெனிகள் உறிஞ்சிக் கொள்ள அனுமதி அளிப்பது, நதிகளை இணைக்க திட்டம் போடுவது, கடலிலே கால்வாய் வெட்டக்கற்பனை செய்வது என்று இவர்கள் போட்ட, போடும் திட்டங்களெல்லாம் சூழலைக் கெடுத்து மாசுபடுத்தி, அதில் தற்காலிக லாபம் சம்பாதிக்கும்காண்ட்டிராக்டர்களிடம் பங்கு பெறும் திட்டங்கள்தானே. பகலிலெல்லாம் கந்து வட்டி வாங்கிவிட்டு மாலையில் அன்னதானம் செய்யும் வர்த்தகரின்மனப்பான்மையிலேயே இந்த அரசியல் கட்சிகளும் இயங்குகின்றன.
|
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்


பத்திரமாக வீட்டில் உட்கார்ந்து அசட்டு டிவி நிகழ்ச்சிகளையும் இடையிடையே சுநாமீ காட்சிகளையும் பார்த்துக் கொண்டிருந்த வால்மீகி நகர், காமராஜ் நகர்,திருவள்ளுவர் நகர், பத்திரிகையாளர் காலனியினர் பாதிக்கப்படவில்லை. ஆனால் அவர்களின் உறவினர்கள்தான் தொலைபேசி அமைப்பையே நிலைகுலைத்தனர்.எழுபதுகளில் நான் நிருபராகப் பணியாற்றிய சமயங்களில் வெள்ளம், புயல் பாதிப்பில் ஒரு பகுதி பாதிக்கப்பட்டால், அதே பகுதியில் எந்தெந்த தெருக்கள்தப்பின என்று பெயரிட்டு எழுதுவது பத்திரிகைத் துறையின் தொழில் கடமையாக இருந்தது. வானொலியும் இந்த தர்மத்தை அன்று பின்பற்றியது. இன்றுமீடியா பரபரப்பை தவிர வேறெந்த அக்கறையும் கொள்வது அபூர்வமாக கிட்டும் வரமாகிவிட்டது. கலைஞர் கைதானபோது பத்து நிமிடத்துக்கொருமுறை அதை ஒளிபரப்பிய சன் டிவி, காலை முதல் மாலை வரை அவர் மரணச் செய்தி வதந்தி- போலீஸ் விஷமம் என்று சொல்லியதே தவிர, அவரைக்காட்டவில்லை. இரவில் காட்சியாகக் காட்டிய அவரைக் காலையிலேயே காட்டியிருந்தால் நாள் முழுக்க வளர்க்கப்பட்ட வதந்தியும் பொதுமக்கள்அலைக்கழிப்பும் தவிர்க்கப்பட்டிருக்கும்.











Click it and Unblock the Notifications