For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கமலா சுரய்யா!

By Staff
Google Oneindia Tamil News

சர்ச்சைக்குரிய பிரபல எழுத்தாளர் கமலா சுரய்யாவின் வாழ்க்கை வரலாறுதிரைப்படமாகியுள்ளது.

மலையாள இலக்கிய உலகில், பெண்ணியல் எழுத்தாளர்களில் முதன்மையானஇடத்தைப் பெற்றிருப்பவர் டாக்டர் கமலா தாஸ். மாதவிக்குட்டி என்ற புனை பெயரில்மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் எண்ணற்ற நூல்களை எழுதியுள்ளார்.

மனதில் பட்டதை அப்படியே எழுத்தில் வடித்து விடும் வழக்கம் கொண்டவர்என்பதால் பல முறை இவரது எழுத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

Kamala Suraiyyaஎன்ட கதா என்ற மலையாள நூல்தான் கமலாவை இலக்கிய உலகில் தனித்துவம்மிக்கவராக வெளிப்படுத்திய நூலாகும். தனது வாழ்க்கை வரலாற்றை இதில்பிரதிபலித்துள்ளார் கமலா.

தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை ஒளிவுமறைவில்லாமல் இதில்தெரிவித்துள்ளார் அவர்.

1932ம் ஆண்டு கேரள மாநிலம் புன்னையூர்குளம் என்ற கிராமத்தில் பிறந்தவர் கமலா.இவரது தந்தை வி.எம். நிாயர், சர்வதேச நிதியத்தின் தலைவராக பணியாற்றியவர்.தனது எழுத்தாற்றலால் மலையாள இலக்கிய உலகில் தனி இடம் பிடித்துள்ள கமலா,ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர்.

மலையாள எழுத்துக்களைப் போலவே அவரது ஆங்கிலப் படைப்புகளும் சமஅளவிலான வரவேற்பையும், விமர்சனங்களையும் சம்பாதித்துள்ளன.கமலா சுரய்யா சில வருடங்களுக்கு முன்பு இஸ்லாம் மதத்திற்கு மாறினார்.

இதுவும் கூட அவரது எழுத்துக்களைப் போலவே பரபரப்பையும், சர்ச்சையையும்ஏற்படுத்தின. மதம் மாறிய பின்னர் தனது பெயரை கமலா சுரய்யா என்று மாற்றிக்கொண்டார்.

சமீபத்தில் லோக் சேவா அறக்கட்டளை என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றைத்தொடங்கினார் கமலா. கைவிடப்பட்ட தாய்மார்களுக்கு இந்த அறக்கட்டளை புகலிடம்அளிக்கிறது. மேலும் மதச்சார்பின்மையை பிரசாரம் செய்யவும் இந்த அறக்கட்டைளமூலம் முயன்று வருகிறார் கமலா.

Kamala Suraiyyaமலையாளத்தில் உருவான அவரது படைப்புகளில் என்டே கதா, மதிலுகள், தனுப்பு,மனசி, பால்ய கால ஸ்மரனகள், மனோமி, வீண்டும் சில கதைகள், என்டே பாதகள்ஆகியவை பெரும் வரவேற்பையும், விமர்சனங்களையும் சந்தித்தவை.

ஆங்கிலத்தில் சம்மர் இன் கல்கத்தா, தி சைரன்ஸ் உள்ளிட்ட பல நூல்களைஎழுதியுள்ளார். அவரது ஆங்கிலக் கவிதைகள், இந்திய இலக்கிய உலகில் கமலாவுக்குதனி இடத்தைப் பெற்றுக் கொடுத்தவை ஆகும்.

இவரது என்ட கதா கிட்டத்தட்ட 15 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட சிறப்புபெற்றது. அவது தி சைரன்ஸ் நூலுக்கு ஆசிய இலக்கிய விருது கிடைத்தது. சம்மர் இன்கல்கத்தா நூலுக்கு கென்ட் விருது கிடைத்தது. இதுதவிர கேரளாவின் பல்வேறுஇலக்கிய விருதுகளையும் பெற்றுள்ளார் கமலா.

இத்தகைய சிறப்பு பெற்ற கமலாவின் வாழ்க்கையை டாகுமெண்டரி படமாகதயாரித்துள்ளார் பிரபல ஆவணப் பட இயக்குனர் சுரேஷ் கோலி. இதுகுறித்து அவர்கூறுகையில், இந்திய இலக்கிய உலகின் சிறந்த படைப்பாளிகளில் ஒருவரான கமலாசுரய்யாவின் வாழ்க்கையை கமலா தாஸ், ஒரு அறிமுகம் என்ற பெயரில் ஆவணப்படமாக எடுத்துள்ளோம்.

இந்தப் படத்தை கொச்சியில் முதலில் திரையிடுகிறோம். அதன் பின்னர்டெல்லியிலும், திருவனந்தபுரத்திலும் திரையிடவுள்ளோம். இதைத் தொடர்ந்துபிராங்க்பர்ட் நகரில் நடைபெறும் புத்தக விழாவில் திரையிடுகிறோம். பிறகுதூர்தர்ஷனிலும் இப்படத்தை ஒளிபரப்ப ஏற்பாடு செய்துள்ளோம்.

இதையடுத்து வர்த்தகரீதியில் இப்படத்தை திரையிட யற்சிகள் எடுக்கப்படும்.ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் மிகச் சிறந்த படைப்புகளைப் படைத்தவர் கமலாசுரய்யா. பல விருதுகளையும், கெளரவங்களையும் பெற்றவர். அவரது இலக்கியவாழ்க்கையை முழுமையாக பதிவு செய்யும் முயற்சியே இந்த ஆவணப் படம்.

இந்தப் படத்தின் திரைக் கதையை கமலா சுரய்யா முழுமையாக படித்துப் பார்த்தார்.படத்தையும் அவர் பார்த்துள்ளார். இந்த 28 நிமிட ஆவணப் படத்தில் அவரதுவாழ்க்கை முழுமையாக படமாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் இஸ்லாமுக்குமாறியது இதில் காட்டப்படவில்லை என்றார் சுரேஷ் கோலி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X