சிறார்களின் நரகங்கள்!
சிறுவர்கள் வசிக்கவே முடியாத நாடாக சூடான் மாறி வருவதாக ஐ.நா.தெரிவித்துள்ளது.
ஐ.நா. சபையின் யுனிசெப் அமைப்பு உலக நாடுகளில் சிறுவர்களின் நிலை குறித்தகருத்தாய்வு ஒன்றை நடத்தியது. இதில் உலகிலேயே சூடான் நாட்டில்தான் சிறுவர்கள்மிகவும் அபாயகரமான வாழ்க்கை வாழ்ந்து கொணடிருப்பதாக தெரிய வந்துள்ளது.
சூடான் தவிர உகாண்டா, காங்கோ ஆகிய ஆப்பிரிக்க நாடுகளிலும் சிறுவர்களின்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
வறுமை, பட்டினி உள்ளிட்ட காரணங்களால் அங்கு லட்சக்கணக்கான சிறுவர்,சிறுமியர் இறந்து கொண்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த மூன்று ஆப்பிரிக்க நாடுகளிலும் சிறுவர்களின் நிலை மிக மோசமாகஇருப்பதற்கு அங்கு நடந்து வரும் உள்நாட்டுப் போர்களே முக்கிய காரணம். சூடானின் டர்ஃபர் பகுதியில் கடந்த 3 வருடமாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.இதனால் கிட்டத்தட்ட 11 லட்சம் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
|
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்
சூடான் தவிர உகாண்டா, காங்கோ ஆகிய ஆப்பிரிக்க நாடுகளிலும் சிறுவர்களின்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
சண்டையில் ஈடுபட்டு வரும் குழுக்கள் தங்களது போரில் சிறுவர்களையும்பயன்படுத்துகிறார்கள். சண்டை போடவோ அல்லது செக்ஸ் அடிமையாகவோ சிறுவர்,சிறுமியரை அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
அங்குள்ள ஒவ்வொருவரின் குடும்பங்களும் சிதறிப் போய் விட்டன. கிராமங்கள்எல்லாம் எரிக்கப்பட்டுவிட்டன. முகாம்களில் தங்கியுள்ள பெண்கள், சிறுமிகள்தொடர்ந்து கற்பழிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர் என்கிறார் மியா.
உகாண்டா ராணுவம்தான் சிறுவர்களை மிகவும் மோசமாக நடத்தி வருகிறது.சிறுவர்களை போர்க் களங்களில் பயன்படுத்துவதோடு அவர்கள் உடல் ரீதியாகவும்,மனரீதியாகவும் துன்புறுத்தப்படுகிறார்கள்.
காங்கோ நாட்டு நிலைமை இன்னும் மோசம். பசியாலும், பட்டினியாலும் இங்குஆயிரக்கணக்கான சிறுவர்கள் தினசரி உயிரிழந்து வருகின்றனர்.
ஈராக்கில் உள்ள சிறுவர்களின் மனதில் அமெரிக்க ராணுவ வீரர்கள் குறித்தும்,உள்ளூரில் உள்ள தீவிரவாதக் குழுக்கள் குறித்தும் பெரும் பீதி நிலவுகிறது. எப்போதுஎன்ன நடக்கும் என்ற பீதியிலேயே அங்குள்ள பெண்களும், சிறுமிகளும் வாழ்ந்துவருகிறார்கள்.
சரியான மருத்துவ வசதி இல்லாமலும், சுகாதாரமான உணவு இல்லாமலும்ஆயிரக்கணக்கானோர் இறந்து வருகின்றனர்.
உலகிலேயே அதிக அளவில் சிறார் தொழிலாளர்களைக் கொண்ட நாடாக இந்தியாதிகழ்கிறது. பள்ளிப் படிப்பை முடிக்காதவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.












Click it and Unblock the Notifications