திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் - லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்
அசுரன் சூரபத்மனை வதம் செய்த திருத்தலம் திருச்செந்தூர். பின்னர் திருச்செந்தூரில் 5 சிவலிங்கங்களை வைத்து வழிபட்டார் முருகப் பெருமான்.
இத்தயைக புகழ்மிக்க திருத்தலமான திருச்செந்தூர் முருகப் பெருமானின் 2வது படை வீடாகவும் சிறப்புற திகழ்கிறது.
மற்ற படை வீடுகள் எல்லாம் குன்றில் அமைந்திருக்க திருச்செந்தூர் மட்டும் கடலோரம் அமைந்துள்ளது இன்னொரு தனிச் சிறப்பாகும்.
கடந்த 1995ம் ஆண்டு இத்திருக்கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இந்த நிலையி்ல 14 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஜூன் 26-ம் தேதி யாகசாலை பூஜைகளுடன் விழா தொடங்கியது. இன்று காலை 10.30 மணிக்கு மேல் காலை 11.15 மணிக்குள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
இதையொட்டி அதிகாலை 5.45 மணிக்கு தொடக்க பூஜைகளுடன் விழா தொடங்கியது.
இதையடுத்து சுப்பிரமணிய சுவாமி வள்ளி-தெய்வானை அம்பாள் சன்னதியில் விழா தொடக்க பூஜைகள், மரபாணி, வாசனை தான்ய திருக்குட நீராட்டு, புனிதநீர், விமான அபிஷேகம், எண்வகை மருந்து சாத்துதல், எழுந்திருப்பு, தமிழ் வேதம் ஓதுதல், நான்கு வேதம் ஓதுதல் ஆகிய நிகழ்ச்சிகளும், சண்முகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு பிம்பசுத்தி, திருக்காப்பிடுதல், 12-வது கால யாகசாலை பூஜைகள், வேள்வி பூஜை, திருக்குடத்தில் இருந்து திருமேனிக்கு உரு ஏற்றல், மகா நிறை அவி அளித்தல், ஆலயப்பயன் புகுமுகம், கடம் மூலாலய பிரவேசம் ஆகிய நிகழ்ச்சிகள் தொடங்கின.
பின்னர் யாக சாலையில் வைக்கப்பட்டிருந்த கும்பங்கள் கிரி பிரகாரம் சுற்றி கோவில் ராஜகோபுரம், விமானங்கள் மற்றும் சன்னதிகளுக்கும் மேள வாத்தியம் முழங்க எடுத்து செல்லப்பட்டன.
காலை 10-30 மணியளவில் ராஜகோபுரம் உள்பட அனைத்து விமானங்களுக்கும் ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து சண்முகர், ஜெயந்திநாதர், நடராஜர், குமரவிடங்கப் பெருமான் மற்றும் உள்வெளி பரிவார மூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
விழாவில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், தமிழக அரசின் தலைமை செயலாளர் ஸ்ரீபதி, மதுரை ஆதீனம் அருணகிரி, திருபனந்தாள் காசிவாசி முத்து குமார தம்பிரான் சுவாமிகள், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் பிரகாஷ், ஜெயதுரை எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து மதியம் 12 மணிக்கு அபிஷேகத்துடன் தங்க ஆபரணம் அணிவித்து தீபவழிபாடு உள்பட சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. இரவு 7 மணிக்கு சண்முகர் தீப வழிபாடு மற்றும் பரிவார மூர்த்திகள் வீதி உலா நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
கும்பாபிஷேகத்தைக் காண பல்வேறு பகுதிகளிலிரு்நதும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்திருந்தனர். இதனால் வங்கக் கடலோரம், மக்கள் கடலாக மாறியுள்ளது.
கும்பாபிஷேகத்தையொட்டி சிறப்புப் பேருந்துகள், ரயில்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் கும்பாபிஷேகத்தை www.tiruchendurmurugantemple.com என்ற தனது இணையதளம் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்













Click it and Unblock the Notifications