முல்லைப் பெரியாறு: தீர்வு காண மத்திய அரசுக்கு ராசல் கைமா தமிழ், மலையாள அமைப்புகள் கோரிக்கை

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை காரணமாக தமிழக-கேரள எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இரு மாநிலங்களுக்கிடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 21ம் தேதி இந்த விவகாரம் தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ராசல் கைமாவில் ராசல் கைமா தமிழ் மன்றமும், கேரள அமைப்பான சேதனாவும் சேர்ந்து நடத்திய சௌஹ்ருத் சங்கமம் என்ற கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் இரு அமைப்புகளும் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து விவாதித்து கூட்டாக அறிக்கை வெளியிட்டன.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, ராசல் கைமா வாழ் தமிழ் மக்களும், கேரள மக்களும் இணைந்து நிறைவேற்றிய தீர்மானத்தை இந்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். முல்லைப் பெரியாறு பிரச்சனையால் இரு மாநில மக்களும் விரும்பத்தகாத முறையில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இது நமது நாட்டின ஒருமைப்பாட்டினை சீர்குலைக்கும் வகையில் உள்ளது.
நமது இந்திய மக்கள் சகோதர, சகோதரிகள் என்ற உணர்வோடு வாழ்ந்து வருபவர்கள். எனவே வன்முறையிலும், கலவரங்களிலும் ஈடுபடுவது விரும்பத்தக்கதல்ல. ஆகவே, இப்பிரச்சனையில் இந்திய அரசு உடனே தலையிட்டு நல்ல தீர்வு காண வேண்டும்.
முல்லைப் பெரியாறு பிரச்சனையால் மேலும் வன்முறை செயல்களும், கலவரங்களும் மற்ற இடங்களுக்கு பரவுவதற்கு முன்பு மத்திய அரசு தலையிட்டு சுமூகமான தீர்வு கண்டு இந்தியாவின் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications