துபாயில் கண்கவர் பரதநாட்டியம் : ஏராளமானோர் கண்டுகளிப்பு!
துபாயில் நடைபெற்ற குமாரி ஷ்ரத்தா ஸ்ரீராம ஐயரின் பரதநாட்டிய அரங்கேற்றம் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.
துபாய் : துபாயில் டாக்டர் ராஜஸ்ரீ வாரியர் தலைமையில் குமாரி ஷ்ரத்தா ஸ்ரீராம ஐயரின் பரதநாட்டியம் பார்வையாளர்களை வெகுவாக கவந்தது.
துபாயில் கடந்த 11 ஆம் தேதி குமாரி ஷ்ரத்தா ஸ்ரீராம ஐயரின் பரதநாட்டிய அரங்கேற்றம் டாக்டர் ராஜஸ்ரீ வாரியர் தலைமையில் வெல்லிங்டன் அரங்கத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. குரு மதுராமீனாக்ஷீ ஸ்ரீனிவாஸ் அவர்களின் பாட்டும் நட்டுவாங்கமும் ஸ்ரீனி கண்ணூர் அவர்களின் மிருதங்கம், திரு சுரேஷ் நம்பூதிரி அவர்களின வயலின், திரு பிரியேஷ் அவர்களின் புல்லாங்குழல் அனைத்தும் வெகு இனிமையாக இருந்தது.

புஷ்பாஞ்சலி, அலாரிப்பில் ஆரம்பித்து கௌத்துவம், வர்ணம், பதம், கீர்த்தனம், தில்லான என ஷ்ரத்தா அசராமல் ஆடிய அனைத்து நடனங்களும் வெகு நளினமாக காண்போர் கண்களைக் கவர்ந்தன. அவர் ஆடிய ஆண்டாள் கௌத்துவம்மு சின்னஞ்சிறு கிளியே பதமும் அவற்றில் அவர் வெளிப்படுத்திய பாவமும் அனைவரின் உள்ளங்களை கொள்ளை கொண்டன. விழாவின் ஏற்பாடுகளை ஷ்ரத்தாவின் பெற்றோர் திருமதி பிரேமா ஸ்ரீராமவும்,திரு ஸ்ரீராம ஸ்ரீனவாசனும் சிறப்பாக செய்திருந்தனர்.
குமாரி ஷ்ரத்தா, குரு திருமதி மீனாட்சி ஸ்ரீனிவாஸ் நடத்திவரும் ஸ்வராலயா நடனப்பள்ளியில் கடந்த 7 வருடங்களாக பரதநாட்டியம் பயின்று வருகிறார். குமாரி ஷ்ரத்தா சிறு வயதுமுதலே பல மேடைகளில் நடனமாடி தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். சம்பவாமி யுகே யுகே, விவேக் 150 போன்ற நாட்டிய நாடகங்களிலும் பங்கேற்று இருக்கிறார். கடந்த வருடம் விபிஜியோர் நடத்திய நர்த்தன சாம்ராட் போட்டியில் பல பிரிவுகளில் வெற்றி பெற்றார்.

இவர் கர்நாடக சங்கீதத்தையும் முறையாக குரு மீனாட்சி ஸ்ரீனிவாஸிடம் முறையாக பயின்று வருகிறார். மோகனா மேடைகளில் பல பஜனை பாடல்களும் திருப்புகழ் அஷ்டபதி பாடல்களும் சத்யா சாய் அமைப்பின் சார்பாக பல பஜனை பாடல்களும் பாடி இருக்கிறார்.ஷ்ரத்தா கூடை பந்து விளையாட்டிலும் கை தேர்ந்தவர்.

ஆங்கில கவிதை எழுதுவதிலும் திறமை பெற்றவர். நீச்சல், ஓவியம் இவரின் பொழுதுபோக்கு. இவர் பேச்சு போட்டியிலும் பல பரிசுகளை வாங்கி உள்ளார். இப்படி பல துறைகளிலும் சிறந்த விளங்கும் ஷ்ரத்தாவிற்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது. ,நதியன் ஹை ஸ்கூல்லில் 9வது படிக்கும் குமாரி ஷ்ரத்தா எதிர்காலத்தில் நாட்டிய உலகில் சிறந்த இடத்தை அடைவார் என்பதில் சந்தேகமில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications