Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நினைவுகள்

Subscribe to Oneindia Tamil

பட்டணத்தில் பேருந்து ஏறும்போதே பற்றிக்கொண்டது
பஞ்சவர்ணத்தின் நினைவுகள்
பல்லாங்குழி ஆடும்போதே பார்த்து பார்த்து - இருவரும்
அங்கம் பருகிக் கொண்டது
ஆடி அம்மன் திருவிழாவில் எதிர்
வரிசையில் இருவரும் இதயங்களை
இணையவிட்டு இடம் தெரியாமல் நின்றது....!

பட்டாம்பூச்சி பிடிக்கையிலே - உன்
பட்டுப்பாவாடையில் தைத்த முள்ளுக்கு
என் நெஞ்சில் அல்லவோ குருதி
பிஞ்சு வயசிலே பாசம் வெச்சோம் -- அதில்
நஞ்சு கலக்குமின்னு நெனைக்கலடி
ஏனோ அன்று நீ வரவில்லை -- காரணம்
நீ வயசுப்பிள்ளையானது.

இருவர் மனத்தில் ஆசையை வளர்த்தது ஆண்டவன் தப்பு
இருப்பினும் இணைவோம் என்ற நம்பிக்கையில்
பட்டணம் வந்தேன் படிக்க -- காலம் சென்றது
உன் பத்திரிக்கை பெற கண்டேன் படபடப்புடன் -- அதில்
பாவி நீ என்னை ஏமாற்றிவிட்டிருந்தாய்
இஷ்டபட்டவனையே நீ கைவிட்டு
கஷ்டப்பட வைத்தாயடி

நிறுத்தத்தில் நித்திரை களைந்தேன்
பேருந்துவிட்டிறங்கி பெருநடை நடந்தேன்
பசி பாடாய் படுத்த பக்கத்து ஓடையை
பதம் பார்த்தேன் -- பத்திரிக்கை
கிழித்து பத்தாண்டு கழித்து வருவதால்
மனம் சிறிது படபடத்தது -- பஞ்சவர்ணமே
பரண் மேல் தூக்கி போட்டது போல் உன் நினைவுகள்.

பிரித்தாலும் முடியவில்லை
பச்சோந்தி போல் உன் நினைவுகள்
முனியான்டி விலாஸில் முகமறந்த - உன்
முகவரி தேடினேன். மும்முரமாய் நடந்தேன்
மூலையில் முட்டுச்சுவர் முனீஸ்வரன் கோயில் தெரு
மாடுகன்னு கட்டியிருக்கும் ஆடுகளும் அங்கிருக்கும்
அதுதான் அவள் வீடு அறிஞ்சுக்கோ ஏ ராசா
அதை சொன்ன கிழவிக்கு ஐஞ்சி ரூபா செலவு.......!

கதவை திறந்தேன் கதிகலங்கி போனேன்
கையில் இரண்டு பிள்ளை -- அவள்
அணிந்திருந்த சேலை வெள்ளை
என்னவளை கண்டதும் இடிதாக்கியது
அப்படியே இங்கிருந்தே அவளை
அள்ளிக் கொண்டது என் மனம் -- அய்யகோ
எங்கனம் சொல்லி இவள் துயர் துடைப்பேன்......!

காலன் கணவனை எடுத்து இரண்டாண்டு
ஆனதை அறிந்தேன் சுவரின் படத்தில்!
அவளின் புடவைக்குபின் பாதி முகம்
தெரிந்தான் பத்துவயது மகன் -- இரண்டுவயசுக்கு இருப்பளித்து நின்றிருந்தாள்
சவுக்கியம் கேட்க சஞ்சலமானது அவள் மனம்
அவளின் உதடுகள் உதறலானது.......!

மெளனமாய் இலையில் இட்லி வைத்தாள்
இப்படி ஒரு நிலையில் இளைப்பாறுவதை
என்மனம் இசைக்கவில்லை -- இருப்பினும்
அவளது கைமணம் என்னை கைகழுவ வைத்தது
உண்டுமுடித்தேன் ஊருக்கு புறப்பட்டேன்
கண்ணீருடன் கையசைக்க வாசலில் நின்றாள்
மூத்தவனை முழுதாய் பார்த்தேன்
முகமுழுவதும் என் ஜாடை - பஞ்சவர்ணத்தை
கேள்வியோடு பார்த்தேன் -- அவள் விழியால்
சொன்ன பதில் என்னை வியக்க வைத்தது
புஜத்தை தூக்கி புன்னகையுடன் புறப்பட்டேன் பட்டணம்.....!

- பாக்கியராஜ்([email protected])

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+