நினைவுகள்
பட்டணத்தில் பேருந்து ஏறும்போதே பற்றிக்கொண்டது
பஞ்சவர்ணத்தின் நினைவுகள்
பல்லாங்குழி ஆடும்போதே பார்த்து பார்த்து - இருவரும்
அங்கம் பருகிக் கொண்டது
ஆடி அம்மன் திருவிழாவில் எதிர்
வரிசையில் இருவரும் இதயங்களை
இணையவிட்டு இடம் தெரியாமல் நின்றது....!
பட்டாம்பூச்சி பிடிக்கையிலே - உன்
பட்டுப்பாவாடையில் தைத்த முள்ளுக்கு
என் நெஞ்சில் அல்லவோ குருதி
பிஞ்சு வயசிலே பாசம் வெச்சோம் -- அதில்
நஞ்சு கலக்குமின்னு நெனைக்கலடி
ஏனோ அன்று நீ வரவில்லை -- காரணம்
நீ வயசுப்பிள்ளையானது.
இருவர் மனத்தில் ஆசையை வளர்த்தது ஆண்டவன் தப்பு
இருப்பினும் இணைவோம் என்ற நம்பிக்கையில்
பட்டணம் வந்தேன் படிக்க -- காலம் சென்றது
உன் பத்திரிக்கை பெற கண்டேன் படபடப்புடன் -- அதில்
பாவி நீ என்னை ஏமாற்றிவிட்டிருந்தாய்
இஷ்டபட்டவனையே நீ கைவிட்டு
கஷ்டப்பட வைத்தாயடி
நிறுத்தத்தில் நித்திரை களைந்தேன்
பேருந்துவிட்டிறங்கி பெருநடை நடந்தேன்
பசி பாடாய் படுத்த பக்கத்து ஓடையை
பதம் பார்த்தேன் -- பத்திரிக்கை
கிழித்து பத்தாண்டு கழித்து வருவதால்
மனம் சிறிது படபடத்தது -- பஞ்சவர்ணமே
பரண் மேல் தூக்கி போட்டது போல் உன் நினைவுகள்.
பிரித்தாலும் முடியவில்லை
பச்சோந்தி போல் உன் நினைவுகள்
முனியான்டி விலாஸில் முகமறந்த - உன்
முகவரி தேடினேன். மும்முரமாய் நடந்தேன்
மூலையில் முட்டுச்சுவர் முனீஸ்வரன் கோயில் தெரு
மாடுகன்னு கட்டியிருக்கும் ஆடுகளும் அங்கிருக்கும்
அதுதான் அவள் வீடு அறிஞ்சுக்கோ ஏ ராசா
அதை சொன்ன கிழவிக்கு ஐஞ்சி ரூபா செலவு.......!
கதவை திறந்தேன் கதிகலங்கி போனேன்
கையில் இரண்டு பிள்ளை -- அவள்
அணிந்திருந்த சேலை வெள்ளை
என்னவளை கண்டதும் இடிதாக்கியது
அப்படியே இங்கிருந்தே அவளை
அள்ளிக் கொண்டது என் மனம் -- அய்யகோ
எங்கனம் சொல்லி இவள் துயர் துடைப்பேன்......!
காலன் கணவனை எடுத்து இரண்டாண்டு
ஆனதை அறிந்தேன் சுவரின் படத்தில்!
அவளின் புடவைக்குபின் பாதி முகம்
தெரிந்தான் பத்துவயது மகன் -- இரண்டுவயசுக்கு இருப்பளித்து நின்றிருந்தாள்
சவுக்கியம் கேட்க சஞ்சலமானது அவள் மனம்
அவளின் உதடுகள் உதறலானது.......!
மெளனமாய் இலையில் இட்லி வைத்தாள்
இப்படி ஒரு நிலையில் இளைப்பாறுவதை
என்மனம் இசைக்கவில்லை -- இருப்பினும்
அவளது கைமணம் என்னை கைகழுவ வைத்தது
உண்டுமுடித்தேன் ஊருக்கு புறப்பட்டேன்
கண்ணீருடன் கையசைக்க வாசலில் நின்றாள்
மூத்தவனை முழுதாய் பார்த்தேன்
முகமுழுவதும் என் ஜாடை - பஞ்சவர்ணத்தை
கேள்வியோடு பார்த்தேன் -- அவள் விழியால்
சொன்ன பதில் என்னை வியக்க வைத்தது
புஜத்தை தூக்கி புன்னகையுடன் புறப்பட்டேன் பட்டணம்.....!
- பாக்கியராஜ்([email protected])
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications