நினைவுகள்
பட்டணத்தில் பேருந்து ஏறும்போதே பற்றிக்கொண்டது
பஞ்சவர்ணத்தின் நினைவுகள்
பல்லாங்குழி ஆடும்போதே பார்த்து பார்த்து - இருவரும்
அங்கம் பருகிக் கொண்டது
ஆடி அம்மன் திருவிழாவில் எதிர்
வரிசையில் இருவரும் இதயங்களை
இணையவிட்டு இடம் தெரியாமல் நின்றது....!
பட்டாம்பூச்சி பிடிக்கையிலே - உன்
பட்டுப்பாவாடையில் தைத்த முள்ளுக்கு
என் நெஞ்சில் அல்லவோ குருதி
பிஞ்சு வயசிலே பாசம் வெச்சோம் -- அதில்
நஞ்சு கலக்குமின்னு நெனைக்கலடி
ஏனோ அன்று நீ வரவில்லை -- காரணம்
நீ வயசுப்பிள்ளையானது.
இருவர் மனத்தில் ஆசையை வளர்த்தது ஆண்டவன் தப்பு
இருப்பினும் இணைவோம் என்ற நம்பிக்கையில்
பட்டணம் வந்தேன் படிக்க -- காலம் சென்றது
உன் பத்திரிக்கை பெற கண்டேன் படபடப்புடன் -- அதில்
பாவி நீ என்னை ஏமாற்றிவிட்டிருந்தாய்
இஷ்டபட்டவனையே நீ கைவிட்டு
கஷ்டப்பட வைத்தாயடி
நிறுத்தத்தில் நித்திரை களைந்தேன்
பேருந்துவிட்டிறங்கி பெருநடை நடந்தேன்
பசி பாடாய் படுத்த பக்கத்து ஓடையை
பதம் பார்த்தேன் -- பத்திரிக்கை
கிழித்து பத்தாண்டு கழித்து வருவதால்
மனம் சிறிது படபடத்தது -- பஞ்சவர்ணமே
பரண் மேல் தூக்கி போட்டது போல் உன் நினைவுகள்.
பிரித்தாலும் முடியவில்லை
பச்சோந்தி போல் உன் நினைவுகள்
முனியான்டி விலாஸில் முகமறந்த - உன்
முகவரி தேடினேன். மும்முரமாய் நடந்தேன்
மூலையில் முட்டுச்சுவர் முனீஸ்வரன் கோயில் தெரு
மாடுகன்னு கட்டியிருக்கும் ஆடுகளும் அங்கிருக்கும்
அதுதான் அவள் வீடு அறிஞ்சுக்கோ ஏ ராசா
அதை சொன்ன கிழவிக்கு ஐஞ்சி ரூபா செலவு.......!
கதவை திறந்தேன் கதிகலங்கி போனேன்
கையில் இரண்டு பிள்ளை -- அவள்
அணிந்திருந்த சேலை வெள்ளை
என்னவளை கண்டதும் இடிதாக்கியது
அப்படியே இங்கிருந்தே அவளை
அள்ளிக் கொண்டது என் மனம் -- அய்யகோ
எங்கனம் சொல்லி இவள் துயர் துடைப்பேன்......!
காலன் கணவனை எடுத்து இரண்டாண்டு
ஆனதை அறிந்தேன் சுவரின் படத்தில்!
அவளின் புடவைக்குபின் பாதி முகம்
தெரிந்தான் பத்துவயது மகன் -- இரண்டுவயசுக்கு இருப்பளித்து நின்றிருந்தாள்
சவுக்கியம் கேட்க சஞ்சலமானது அவள் மனம்
அவளின் உதடுகள் உதறலானது.......!
மெளனமாய் இலையில் இட்லி வைத்தாள்
இப்படி ஒரு நிலையில் இளைப்பாறுவதை
என்மனம் இசைக்கவில்லை -- இருப்பினும்
அவளது கைமணம் என்னை கைகழுவ வைத்தது
உண்டுமுடித்தேன் ஊருக்கு புறப்பட்டேன்
கண்ணீருடன் கையசைக்க வாசலில் நின்றாள்
மூத்தவனை முழுதாய் பார்த்தேன்
முகமுழுவதும் என் ஜாடை - பஞ்சவர்ணத்தை
கேள்வியோடு பார்த்தேன் -- அவள் விழியால்
சொன்ன பதில் என்னை வியக்க வைத்தது
புஜத்தை தூக்கி புன்னகையுடன் புறப்பட்டேன் பட்டணம்.....!
- பாக்கியராஜ்([email protected])
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications