For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'பாவரசன்' பாரதி?(ஒரு கற்பனைக் கவிதை)

By Staff
Google Oneindia Tamil News


-சண்முகா

மீசைக் கவி -- முண்டாசுக் கவி
கருங் கோட்டுக் கவி -- பயமிலாப் பாட்டுக் கவி
எங்கள் பாரதி !

பாருக்குப் பா தந்து
பருத்த யானைக்குப் பழம் தர
பார்த்தசாரதி கோவில் சென்றாய்
பக்தர் வெள்ளமங்கே!

கரிய நிறத்தந்த யானை
கண்கள் சிவந்து நிற்கக் கண்டீர்

முரசென அகன்றதன் காதுகள்
பட படக்கக் கண்டீர்

சுருண்டு நீளும் துதிக்கை மீண்டும்
சுருண்டு நீளக் கண்டீர்

பெரிய அதன் உருவம்
சரிந்து சரிந்தாடக் கண்டீர்

கூரிய அதன் விழிகள் கவியைக்
கூட்டத்தில் கீறித்தேடக் கண்டீர்

குழந்தையாய்க் கவியும் அதனருகே
கொஞ்சிச் செல்லக் கண்டீர்

பயம் கொள்ளாப்
பா(க்கள்) எழுதிப்
பார் உயரப்
பாடுபட்டு
பாவரசன் ஆனாய்!

பாவரசன் உன்னை
பதம் பிரிக்கத் தெரியா
மதம் கொண்ட யானை
மிதித்துக் கொன்றதுவோ?!

பொருள் மாறும் காரணத்தால்
பாவரசன் நீக்கி
பாவிற்கதிபதி
பாரதி நீ என
பயந்த யானையிடம்
பார்ப்போர் சொல்லியிருந்தால் ...

இன்று நின்னுயிர்
நின்றிருக்குமோ எங்களுடன் !

ஏராளப் பாடல்கள்
இன்னும் கிடைத்திருக்கும்!

-சண்முகா([email protected])


 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X