கால தேவன்

Subscribe to Oneindia Tamil

காலம் ஒரு மலராய்.
"ஒவ்வொரு நாள்"ம் அது
அவிழ்க்கும் மடல்களாய்.
எல்லையற்று விரிந்து
பரவும் அந்த மலர்.

"ஒவ்வொரு நாள்"ம்
கதவு பூட்டப்பட்ட மர்ம
குகையாய். உள்ளே
இருப்பதறியாமல் உள்ளே
நுழைகிறான் மனிதன்.

சிலருக்கு புத்தம் புதிய
ஆடைகள்; சிலருக்கு
ஆபரண அணிகலன்கள்; சிலருக்கு
அழுகை; சிலருக்கு
இன்பம்; இப்படி
எத்தனையோ அந்த அறையில்
காத்திருக்கின்றன.

சிலருக்கு புதிய குழந்தை.
அங்கிருந்து குழந்தையும்
அடுத்த அறைக்குள் நுழைய
ஆரம்பிக்கின்றது.சிலருக்கு
அதுவே கடைசி அறையாய்.
அங்கேயே தங்கிவிடு்ம் அவர்
அடுத்து முன்னேறுவதில்லை.
அவருக்காய் அழுதுகொண்டே
அடுத்த அறைக்குள் நுழையும் பலர்.

ஆயிரம் ஆயிரமாவது அறைக்குள்
எனக்கென என்ன இருக்கிறது?
ஏன்? அடுத்த அறைக்குள் எனக்கென
இருப்பதே எனக்குத் தெரியாதே!!

ஈ, எறும்பு எண்ணாயிரம் கோடி
ஜீவராசிகளுக்கும் புத்தம் புதிய
பொருள்களை ஒவ்வொரு நாளும்
பூட்டிவைத்து திறந்துவிடும் காலதேவன்,
கற்பனைக்கு எட்டாதவனாய்!

எப்படியோ இந்த அறைக்குள்
உங்களுககும் எனக்கும் பரிசாய்
கிடைத்து விட்டது இந்த கவிதை!!

-தநுசு (ஜப்பான்) [email protected]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+