Rasi Palan This Week: கடக ராசிக்கு அடிச்சது ஜாக்பாட்.. வாழ்க்கையை மாற்ற போகும் அந்த முக்கிய முடிவு
வார ராசி பலன்: செப்டம்பர் 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான ஆவணி 23 முதல் ஆவணி 29 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். பொதுவாக இந்த மாதம் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும். வீடு வாங்குவோருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும்.
சூரிய கிரகணம், குரு வக்கிர பெயர்ச்சி உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், செப்டம்பர் 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கடகம்
கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். குழந்தைகள் கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட விஷயத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்யோகம், தொழிலில் மேன்மை ஏற்படும். உத்யோகம், தொழிலில் இருந்த தடைகள் விலகும். தொழில் அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்பு ஏற்படும். மனதில் தன்னம்பிக்கை, தைரியம் இருக்கும். பழைய பாக்கி வசூலாகும். கடன் சுமை குறையும்.
மாற்றம்
குடும்ப உறவுகளில் இருந்த சிக்கல்கள் தீரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். தாய், தந்தை வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். மனதில் நினைத்த காரியங்கள் படிப்படியாக நிறைவேறும். இழுபறியாக இருந்த காரியங்கள் நிறைவேறி வெற்றி கிடைக்கும். நெருக்கடியான நேரத்தில் தைரியமாக எடுக்கும் முடிவுகளால் வாழ்க்கை பெரிய மாற்றம், முன்னேற்றம் இருக்கும்.
முடிவில் உறுதி
எடுத்த முடிவில் எந்த காரணம் கொண்டும் பின் வாங்க கூடாது. நீங்கள் எடுக்கும் எந்த ஒரு முடிவும் முன்னேற்றத்துக்கானது, அதனால் உங்களுக்கு வெற்றியை மட்டுமே கொடுக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் காணப்படும். நிலம், வீடு, ஆடை, ஆபரணங்கள் உள்ளிட்ட அசையும், அசையா சொத்து சேர்க்கை இருக்கும்.
கவனம்
வண்டி, வாகனத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும். வார்த்தைகளில் மிகுந்த கவனம் வேண்டும். கோபத்தால் உறவில் உறவுகளிடம் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. அவ்வபோது மன அழுத்தம், குழப்பம் வந்து செல்லும். நேர்மறையான எண்ணங்களை அதிகம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
பரிகாரம்
பல், காது, மூக்கு, தொண்டை ஆகியவற்றில் கவனம் வேண்டும். சிறிய தொந்தரவாக இருந்தாலும் அலட்சியம் காட்டாமல் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுப்பது நல்லது. உங்கள் வீடு அருகே உள்ள சிவன் கோயில் சென்று வழிபடுவது உங்களுக்கு அற்புதமான மாற்றத்தை கொடுக்கும். கோளறு பதிகம் படிப்பதால் தடைகள் விலகி மனதில் தன்னம்பிக்கை ஏற்படும்.












Click it and Unblock the Notifications