துலாம் ராசிக்கான இந்த மாத ராசிபலன் ஏப்ரல் 14 முதல் மே 14 வரை (This Month Thulam rasipalan): துலாம் ராசிகாரர்களுக்கு இந்த மாதம் எப்படி இருக்கும்? இந்த மாதத்தில் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுமா? உங்களின் பலம், பலவீனம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த பக்கத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
துலாம் ராசி அன்பர்களே...!
குரு பாக்கியஸ்தானத்திலிருந்து பலன்களை அள்ளித் தரப் போகிறார். குடும்பத்தில் குதூகலமும் மகிழ்ச்சியும் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி இருவரும் கருத்து அறிந்து நடந்து கொள்வார்கள். ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதால் பார்ப்பவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு இல்லறம் நடக்கும். சுப நிகழ்ச்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. அடுத்தடுத்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உறவினர்களின் அன்பும் அனுசரணையும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வீட்டில் அமைதி நிலவும். பெற்றோரின் ஆசியால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.
பணத்தட்டுப்பாடு மாத நடுப் பகுதியில் நிவர்த்தியாகும். வீட்டிற்கு தேவையான முக்கிய பொருட்களை வாங்குவீர்கள். அதற்காக சேமித்த பணத்தை எடுத்து செலவு செய்வீர்கள். மனைவியின் தேவையை பூர்த்தி செய்து மகிழ்ச்சிப் படுத்துவீர்கள். பிள்ளைகள் கேட்ட பொருட்களை வாங்கி கொடுத்து பாசமழையில் நனைய வைப்பீர்கள். குடும்பத்துடன் முக்கியமான நிகழ்வில் கலந்து கொள்வீர்கள். பழைய நேரத்துக்கடனை நிறைவேற்றுவதற்காக குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவீர்கள். பிள்ளைகளின் படிப்புக்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். அதற்கு பெரிய மனிதரின் உதவி கிடைக்கும்.
அலுவலகத்தில் வேலை அழுத்தம் அதிகம் இருந்தாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உடன் வேலை பார்ப்பவரிடம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதிகாரிகளிடம் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு மாத பிற்பகுதி சற்று சிரமத்தை கொடுக்கலாம். இருப்பினும் அதனால் பெரிய பாதிப்பு இருக்காது .
தொழில் வியாபாரம் இரண்டும் தொய்வில்லாமல் நடக்கும். போட்டியாளர்களின் இடையூறு இருந்தாலும் அது தொழிலை பாதிக்காது. வருமானத்திற்கும் குறைவிருக்காது. அதே நேரத்தில் வரவு செலவு கணக்கில் கவனமாக இருக்க வேண்டும்.
குடும்பத்தை நிர்வாகம் செய்யும் பெண்களுக்கு பல நன்மைகள் உண்டாகும். அவர்கள் ஆசைப்பட்ட பொருளை வாங்குவார்கள். விலை அதிகரித்தாலும் ஏற்கனவே சீட்டு போட்ட பணத்திற்கான தங்க நகையை வாங்கி சந்தோஷப்படுவார்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கும் நன்மையான காரியங்கள் நடக்கும்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஏப்ரல் 15 18 19 20 21 24 25 26 27 30 மே 1 2 3 5 6 7 9 10 11
அதிர்ஷ்ட எண்கள்: 6,9,4,3
சந்திராஷ்டம நாள்கள்: ஏப்ரல் 20 காலை முதல் 21 22 அதிகாலை வரை.
பரிகாரம்: பெருமாள் வழிபாடும்,
'ஓம் ஹரி ஹரி போற்றி,
ஓம் ஸ்ரீ ஹரி போற்றி'
பாராயணம் செய்வதும் நன்மை தரும்.
| தேதி | 8 - சித்திரை - பராபவ வருடம் செவ்வாய் |
| நாள் | செவ்வாய் |
| திதி | பஞ்சமி (up to April 22, 1:20 am) சஷ்டி (up to April 22, 10:50 pm) |
| நட்சத்திரம் | ரோஹிணி (up to 2:08 am) மிருகசீரிடம் (up to 11:58 pm) திருவாதிரை (up to April 22,10:13 pm) |
| யோகம் | அமிர்த-சித்த-மரண யோகம் |
| நல்ல நேரம் | 7:30 - 8:30 am / 4:30 - 5:30 pm |
| கௌரி நல்ல நேரம் | 1:45 - 2:45 am / 7:30 - 8:30 pm |
| இராகு காலம் | மதியம் 3.00 - 4.30 |
| எமகண்டம் | காலை 9.00 - 10.30 |
| குளிகை | மதியம் 12.00 - 1.30 |
| சூலம் | வடக்கு |
| பரிகாரம் | பால் |
| சந்திராஷ்டமம் | விசாகம் |
| சூரியோதயம் | 5:56 AM |
| சூரிய அஸ்தமனம் | 6:18 PM |
| சந்திரோதயம் | Apr 21 9:07 AM |
| சந்திர அஸ்தமனம் | Apr 21 10:38 PM |