ஆடித்திருவிழா: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் திருக்கல்யாணம் - மறுவீடு நிகழ்ச்சி ரத்து
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா பக்தர்கள் பங்கேற்பு இன்றி நடைபெறுகிறது. சுவாமி அம்பாள் மறு வீட்டிற்கு செல்லும் நிகழ்ச்சியும் இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவில் ஆடி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெறுகிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் 17ஆம் தேதி சுவாமி அம்பாள் மறு வீட்டிற்கு செல்லும் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ராமேஸ்வரத்தில் உள்ள புகழ்பெற்ற ராமநாதசுவாமி ஆலயத்திற்கு சாமி தரிசனம் செய்ய நாடு முழுவதிலும் இருந்தும் பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இங்கு ஆண்டுதோறும் ஆடி திருக்கல்யாண திருவிழா மற்றும் மாசி மகா சிவராத்திரி திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழா 1ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக திருத்தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. கோவில் வளாகத்திற்குள் தங்கத்தேரோட்டம் நடைபெற்றது.
இன்றைய தினம் ராமநாதஸ்வாமிக்கும், பர்வதவர்த்தினி அம்மனுக்கும் திருக்கல்யாண வைபவம் இன்று நடைபெறுகிறது. இந்த திருக்கல்யாணத்தைக் காண பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மறுவீடு செல்லும் வைபவமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆடித்திருவிழா கொடியேற்றம்
கொரோனா பரவல் தடுப்பு தட்டுப்பாடு காரணமாக ராமேஸ்வரம் கோவிலில் பக்தர்கள் இல்லாமலே ஆகஸ்ட் 1ஆம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கொரோனா பரவல் கட்டுப்பாடு தடுப்பு முன்னெச்சரிக்கை காரணமாக இந்த ஆண்டு திருவிழாவில் நடைபெறும் சாமி வீதி உலா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவிலின் உள்பகுதியில் 3ஆம் பிரகாரத்தில் நடைபெற்றது.

தீர்த்தவாரி ரத்து
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அக்னி தீர்த்த கடற்கரைக்கு சாமி எழுந்தருளும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. கோவிலின் உள்ளேயே உள்ள சிவ தீர்த்தத்தில் தீர்த்தவாரி பூஜை நடைபெற்று கோவிலின் 3ஆம் பிரகாரத்தில் சாமி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தங்கத் தேரோட்டம்
அம்பாள் திருத்தேரோட்ட நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது. தங்க தேரில் அம்மன் எழுந்தருளி மூன்றாம் பிரகாரத்தில் உலா வந்தார் பர்வதவர்த்தினி அம்மன். ராம தீர்த்தம் தபசு மண்டகப்படியில் வைத்து நடைபெறும் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நேற்றைய தினம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

மாலை மாற்றுதல்
பர்வதவர்த்தினி அம்பாள் வெள்ளி கமல வாகனத்தில் 3ஆம் பிரகாரத்தின் மையப்பகுதியில் எழுந்தருளினார். தொடர்ந்து ராமநாதசாமி பிரியாவிடையுடன் தங்க ரிஷப வாகனத்தில் 3ஆம் பிரகாரத்திற்கு எழுந்தருளினார்.
சாமியை அம்பாள் மூன்று முறை சுற்றி வரவே சாமி கழுத்திலிருந்து அம்பாள் கழுத்திலும், அம்பாள் கழுத்திலிருந்து சாமி கழுத்திலும் மூன்று முறை மாலை மாற்றப்பட்டு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு மகா தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன.

சுவாமி அம்மன் திருக்கல்யாணம்
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி இன்று இரவு தெற்கு கோபுர வளாகப் பகுதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து நடைபெறுகிறது. திருக்கல்யாண நிகழ்ச்சியை காணவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவிழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியாக வருகிற 17ஆம் தேதி அன்று சுவாமி அம்பாள் மறு வீட்டிற்கு அதாவது கந்தமாதன பர்வதம் மண்டகப்படி செல்லும் நிகழ்ச்சியும் இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications