ஆடிக்கிருத்திகை முருகன் கோவில்கள் முன்பு குவிந்த பக்தர்கள்... நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு
ஆடிக்கிருத்திகை நாளில் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் கோவிலுக்கு முன்பாக குவிந்த பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டு சென்றனர்.
பழனி: பழனி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை மற்றும் ஆடி18 முன்னிட்டு 2ம் தேதி மற்றும் 3 ம் தேதி இரண்டு நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு இருந்தபோதிலும் தங்களுடைய நேர்த்திக் கடனை செலுத்துவதற்காக கோவில் முன்பு நின்று வழிபாடு செய்து பக்தர்கள் செல்கின்றனர்.
தமிழகத்தில் ஆடி மாதத்தில் கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக முருகன் மற்றும் அம்மன் கோவில்களில் ஆடி மாதத்தில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
ஆடி கிருத்திகையை ஒட்டி, பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலிலும், மக்கள் கூட்டத்தை தடுக்கும் நோக்கில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

தெப்ப திருவிழா
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. திருத்தணி கோயில் சிறப்பு பூஜைகள், தெப்ப உற்சவ விழாக்களை இணையதளத்திலும், யூடியுப் சேனலிலும் நேரடியாக மாலை ஐந்து மணி அளவில் ஒளிபரப்பப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குவிந்த பக்தர்கள்
ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோயிலில் சாதாரண நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம் கொரோனா நோய் பரவலை குறைவின் காரணமாக கடந்த 20 நாட்களுக்கு முன்பு சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது அதன்படி பழனி கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது.

பக்தர்களுக்கு தடை
கொரோனா பரவல் அதிகரிப்பதை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பக்தர்கள் அதிகம் கூடும் முக்கிய கோவில்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்து வருகிறது. மேலும் முருகனுக்கு உகந்த நாளான ஆடி கிருத்திகை க்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்பதாலும் ஆடி பதினெட்டாம் நாள் திருவிழாவினை முன்னிட்டு நாளை அதிக அளவில் பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் கொரோனா தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும் பொருட்டு இன்றும் நாளையும் நாட்களில் பழனி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

வாசலில் வழிபட்ட பக்தர்கள்
இந்த நாட்களில் கோவிலில் ஆகம விதிப்படி அனைத்து நிகழ்வுகளும் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும் சில பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக் கடனை செலுத்துவதற்காக கோவில் வாசலில் சூடம் பொருத்தி வழிபாடு செய்து பக்தர்கள் செல்கின்றனர்.

நேரலையில் சாமி தரிசனம்
சென்னையில் உள்ள வடபழனி, கந்தகோட்டம் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களிலும், அம்மன் கோவில்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறப்பு அபிஷேக ஆராதனைகளை பக்தர்கள் ஆன்லைன் மூலம் தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சித்திரை திருவிழா, வைகாசி விசாகம் உள்ளிட்ட திருவிழாக்களை ஆன்லைனில் மட்டுமே தரிசனம் செய்தனர். இன்று ஆடிக்கிருத்திகை நாளில் பக்தர்கள் நேரடியாக சென்று வழிபட முடியாமல் நேரலையில் தரிசனம் செய்து வருகின்றனர்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications