ராகு கேது பெயர்ச்சி 2017: நாட்டில் பணத்தட்டுப்பாடு நீங்கும், தொழில் பெருகும்!
சர்ப்ப கிரகங்களான ராகுவும் கேதுவும் யோகம் தரும் வீடுகளான கடகம், மகரத்தில் அமர்வதால் உலகெங்கும் பணத்தட்டுப்பாடு விலகும்.
சென்னை: சர்ப்ப கிரகங்களான ராகுவும் கேதுவும் கடக ராகு, மகர கேதுவாக இன்று முதல் சஞ்சாரம் செய்யப்போகின்றனர். சர்ப்ப கிரகங்களான ராகுவும் கேதுவும் யோகம் தரும் வீடுகளான கடகம், மகரத்தில் அமர்வதால் உலகெங்கும் பணத்தட்டுப்பாடு விலகும்.
நிகழும் ஹேவிளம்பி ஆண்டு ஆடி 11ஆம் நாளான இன்று வியாழக் கிழமை ஜூலை 27,2017 ல் வாக்கியப் பஞ்சாங்கப்படி சுக்லபட்சம் பஞ்சமி திதி, உத்திரம் நட்சத்திரம், சனி ஹோரையில், பகல் 12.39 மணிக்கு சிம்மம் ராசியில் இருந்து கடக ராசியில் ராகு பகவான் இடப்பெயர்ச்சியாகிறார். கும்பராசியில் இருந்து மகர ராசிக்கு கேது பகவான் இடப்பெயர்ச்சி அடைகிறார்.
ராகுவைப் போல கொடுப்பானுமில்லை, கேதுவைப்போல கெடுப்பானுமில்லை என்று சொல்லி வைத்துள்ளார்கள். ஆனால் ராகுவை கொடை வள்ளல் என்றும், கேதுவை கெடுப்பவன் என்றும் நாம் கருதக் கூடாது.

அள்ளிக்கொடும் ராகு
ராகு ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்றிருந்தால் கிள்ளிக்கொடுக்காமல் அள்ளிக்கொடுப்பார். பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியும்.

ஞானம் தரும் கேது
அதே நேரத்தில் ஒருவர் ஜாதகத்தில் கேது பலம் பெற்றிருந்தால் ஞானம் விருத்திக்கும். நல்ல அறிவாற்றல் சித்திக்கும். கீர்த்தி மேலோங்கும். எனவே கேதுவைப் போல கிடைப்பானுமில்லை என்றே நாம் சொல்லலாம்.

பணத்தட்டுப்பாடு நீங்கும்
கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் பகை வீடான சிம்மம் மற்றும் கும்பத்தில் ராகு, கேதுவாகிய சர்ப்ப கிரகங்கள் இரண்டும் அமர்ந்து, நாடெங்கும் பணப் பற்றாக்குறையை ஏற்படுத்தின. இப்போது, இந்த இரண்டு கிரகங்களும் யோகம் தரும் வீடுகளில் அமர்வதால் உலகெங்கும் பணத்தட்டுப்பாடு விலகும்.

புதிய தொழில் பெருகும்
கடகத்தில் ராகு அமர்வதால் நாடெங்கும் புதிய தொழில் தொடங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மனோகாரகனும், தாய்காரகனும் மற்றும் கலைகளுக்குரிய கிரகமுமான சந்திரனின் கடக ராசியில் ராகு அமர்கிறார். கேது, கும்ப ராசியிலிருந்து விலகி மகரத்தில் அமர்வதால் உலகெங்கும் வியாபாரம் செழித்து ஓங்கும். தொழிலாளி மற்றும் முதலாளித் துவத்துக்குரிய கிரகமான சனி பகவானின் மகர ராசியில் கேது பகவான் அமர்கிறார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications