குரோதி தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2024: குடும்ப குரு.. ஏழரை சனி..யாருடைய வாழ்க்கையில் திடீர் திருப்புமுனை
சென்னை: தமிழ் புத்தாண்டு இன்னும் சில மாதங்களில் பிறக்கப்போகிறது. குரோதி தமிழ் புத்தாண்டில் பலரது வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படப்போகிறது. காரணம் சித்திரை மாதத்திலேயே குரு பகவான் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பகவான் மீன ராசிக்கு சென்று ராகு உடன் இணையப்போகிறார். இந்த கிரகங்களின் மாற்றத்தினால் மேஷ ராசியில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் ஏற்படப்போகிறது என்று பார்க்கலாம்.
மேஷம்: குரோதி தமிழ் புத்தாண்டில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ஜென்ம குரு சித்திரை மாதத்தில் இடப்பெயர்ச்சியாகி இரண்டாம் வீட்டிற்கு செல்கிறார். ராகு உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்திலும் கேது உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டிலும் பயணம் செய்யப்போகிறார். ஆண்டு முழுவதும் லாப ஸ்தானத்தில் பயணம் செய்யும் சனி பகவான் ஆண்டின் இறுதியில் 12ஆம் வீட்டிற்கு வரப்போகிறார். ஏழரை சனி ஆரம்பமாகப்போகிறது.

வேலை தொழில்: புது வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அரசு வேலைக்காக தேர்வு எழுதியிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி யோகம் தேடி வரும். உயர்பதவியும் சம்பள உயர்வும் கிடைக்கும். செய்யும் தொழில் விருத்தியாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிரிகள் தொல்லை நீங்கும். எதிரிகளை வெல்லும் ஆற்றல் உண்டாகும். வாடகை வீட்டில் வசிப்பவர்கள் சொந்த வீடு, நிலம் வாங்கலாம்.
குரு பெயர்ச்சி: வெளிநாட்டு வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு குரு பெயர்ச்சிக்குப் பிறகு வைகாசி மாதத்தில் வெளிநாட்டில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். வருமானம் பல மடங்காக உயரும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கடனாக கொடுத்த பணம் திரும்ப கைக்கு கிடைக்கும். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 6,8,10ஆம் இடங்களின் மீது விழுவதால் பணம் பல வழிகளில் வரும் வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.
குரு பார்வை: தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் பயணம் செய்யும் குருவின் பார்வை ஆறாம் வீட்டில் உள்ள கேதுவின் மீது விழுகிறது. நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும். புரட்டாசி மாதத்தில் குரு பகவான் வக்ரமடையும் போது பண விசயங்களில் கவனமாக இருக்க வேண்டும். ஜென்ம குருவின் இடமாற்றம் குழப்பத்தை நீக்கும் மனக்கவலைகள் மறையும். குரோதி ஆண்டில் சுப விரைய செலவுகள் அதிகரிக்கும்.
ஏழரை சனி: சனி பகவான் 11 மாதங்களுக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்வது சிறப்பு. தொட்டதெல்லாம் துலங்கும். சனி பகவான் பார்வை உங்கள் ராசியின் மீது விழுவதால் செய்யும் செயல்களில் நிதானம் தேவை. குரோதி ஆண்டின் இறுதியில் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ம் தேதி பங்குனி மாதம் 15ஆம் தேதி முதல் ஏழரை சனி ஆரம்பமாகப்போகிறது. சம்பாதித்த பணத்தை கவனமாக செலவு செய்ய வேண்டும். தொழில் முதலீடுகளில் கவனம் தேவை. பணத்தை யாருக்கும் கடனாகக் கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள்.
பரிகாரம்: ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். நினைத்த காரியம் நிறைவேறும். அதே நேரத்தில் தேவையில்லாத விசயங்களில் கவனத்தை செலுத்த வேண்டாம். உங்கள் குல தெய்வ கோவிலுக்கு சென்று சக்திக்கு ஏற்ப படையல் போட்டு வழிபடுங்கள் சர்க்கரை பொங்கல் வைத்து புடவை சாற்றி வழிபட சந்தோஷங்கள் அதிகரிக்கும். மொத்தத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் தேடி வரும் ஆண்டாக குரோதி ஆண்டு அமைந்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கோடீஸ்வர யோகம் பெறும் சிம்ம ராசி.. அள்ளிக் கொடுக்கும் குரு, கேது பகவான் -
தமிழ் புத்தாண்டு பலன்: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டமும், ஆபத்தும் சேர்ந்து வருது.. இந்த விஷயத்தில் கவனம் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்!












Click it and Unblock the Notifications