தீபாவளி: மகனாக இருந்தாலும் நரகாசூரனை கொன்ற சத்யபாமா - நரக சதுர்த்தசி புராண கதை
விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணர், கொடிய நரகாசுரனை வதம் செய்ததைக் கொண்டாடும் நாளே தீபாவளி. இந்த நாள் நரக சதுர்த்தசியாகவும் கடைபிடிக்கப்படுகிறது.
மதுரை: நரகாசுரன் சம்ஹாரம் செய்யப்பட்ட நாளைத்தான் தீபாவளி பண்டிகையாக கொண்டாடுகிறோம். நரகனை சம்ஹாரம் செய்த நாளானதால், நரக சதுர்த்தசி என்றும் தீபாவளி அழைக்கப்படுகிறது. தனது தாயினால் மரணம் நேர வேண்டும் என்று பிரம்மாவிடம் நரகாசூரன் வேண்டிக்கொள்ள அந்த வரத்தை கொடுத்தார் பிரம்மா. ஆணவத்தில் ஆடிய நரகாசூரனை சத்யபாமா மூலம் வதம் செய்தார் கிருஷ்ணர் என்கிறது புராண கதை.
திருமாலின் வராக அவதாரத்திற்கும் பூமாதேவிக்கும் பிறந்தவர் நரகாசுரன் . இவர் தன்னுடைய தாயினால்தான் மரணம் ஏற்பட வேண்டும் என்ற வரம் வாங்கியதாகவும், அதன் காரணமாக திருமாலின் கிருஷ்ண அவதாரத்தில் பூமாதேவி சத்தியபாமாவாக பிறந்து நரகாசுரனை வதம் செய்ததாகவும் கூறுகிறது புராண கதை.
நரகாசுரனின் மரணத்தினை தேவர்கள் கொண்டாடியது போல மக்களும் கொண்டாட வேண்டும் என்று சத்யபாமா கிருஷ்ணரிடம் வரம் வாங்கியதால் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

நரகாசூரன்
பூதேவியின் மகனான நரகாசுரன், பிரம்மாவை வேண்டி கடும் தவம் இருந்து, தனது தாயைத் தவிர வேறு யார் கையாலும் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்ற வரத்தைப் பெற்றவன். நரகாசுரனின் கொட்டம் நாளுக்கு நாள் அதிகரித்ததால், தேவர்களும், கடவுள்களும் கிருஷ்ணரைச் சந்தித்து முறையிட்டனர். நரகாசுரனை அழிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர்.

கிருஷ்ணாவதாரம்
பகவான் மகா விஷ்ணு தனது எட்டாவது அவதாரமான கிருஷ்ணா அவதாரத்தின் போது நரகாசூரனை வதம் செய்வதாக வாக்களித்தார். பகவான் மகாவிஷ்ணு. பூமா தேவி சத்யபாமாவாக அவதாரம் எடுத்து கிருஷ்ணரை மணந்து கொள்கிறார்.
நரகாசூரனுக்கும் பகவான் கிருஷ்ணருக்கும் இடையே போர் நடக்கிறது.

நரகாசூரனை சம்ஹாரம் செய்த தாய்
போர்களத்தில் சத்யபாமாதான் தேரை ஓட்டிக்கொண்டிருக்கிறார். நரகாசுரன் விட்ட ஒரு அம்பு தாக்கி கிருஷ்ணர் மயக்கமடைகிறார். இதுவும் கிருஷ்ணரின் லீலைதான். இதைப்பார்த்து கோபமடைந்த சத்யபாமா, நரகாசூரனை வதம் செய்தார்.
பகவான் கிருஷ்ணர் நரகாசுரன் பிடியில் இருந்த அனைத்துப் பெண்களையும் தேவர்களிடம் ஒப்படைத்தார்.

நரக சதுர்த்தசி
நரகாசுரன் சம்ஹாரம் செய்யப்பட்ட அந்த நாளைத்தான் ‘தீபாவளி' என்று கொண்டாடுகிறோம். நரகனை சம்ஹாரம் செய்த நாளானதால், ‘நரக சதுர்த்தசி' என்றும் தீபாவளி அழைக்கப்படுகிறது. நரகாசூரன் வதம் செய்ய நாளினை மக்கள் சந்தோஷமாக கொண்டாட வேண்டும் என்று பகவான் கிருஷ்ணரிடம் வரம் கேட்கிறார் சத்யபாமா.

நன்மை நிலைக்கட்டும்
உலகில் உள்ளவர்களுக்கு எவ்வித துக்கமும் இருக்கக் கூடாது. அன்று எல்லோரும் மங்கல நீராடி, புத்தாடை உடுத்தி, விருந்து உண்டு சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ள அவ்வாறே ஆகட்டும் என்று வரம் அளித்தார் கிருஷ்ணர். நமக்கு ஏற்படும் தீமைகள் அழிந்து நன்மைகள் ஏற்பட வேண்டும் என்றும் கொரோனா அசுரனை அழிக்க வேண்டும் என்று பகவான் கிருஷ்ணரை
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications