மதுரை சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம்
மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. இன்று முதல் மதுரையில் மீனாட்சி அம்மன் ஆட்சி தொடங்குகிறது.
மதுரை : சித்திரை திருவிழாவின் எட்டாம் நாள் அம்மன் சன்னதியில் உள்ள ஆறுகால் பீடத்தில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. இன்று முதல் மதுரையில் மீனாட்சி அம்மன் ஆட்சி தொடங்குகிறது.
மதுரையில் பாண்டிய மன்னன் மலையத்துவராஜனுக்கு மகளாக பிறந்த மீனாட்சி பட்டத்து ராணி ஆனார். சுந்தரேசுவரரை மணந்த பின், அவர்கள் இருவரும் சேர்ந்து நகரை ஆண்டு வந்தனர்.
இதை நினைவுபடுத்தும் வகையில் ஆவணி மாதம் முதல் பங்குனி மாதம் வரை மதுரையை சுந்தரேசுவரப்பெருமானும், சித்திரை முதல் ஆடி வரையிலான 4 மாதங்கள் மீனாட்சி அம்மனும் ஆட்சி செய்வதாக ஐதீகம்.

அம்மன் வீதி உலா
உலக பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்ரல் 28ஆம் தேதி நாள் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் காலை மாலை இரு நேரங்களிலும் மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரர் பிரியா விடையுடன் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். விழாவின் 7ம் நாளான நேற்று காலை 8 மணிக்கு அம்மன், சுவாமி மாசி வீதிகளில் வலம் வந்தனர்.

சித்திரை திருவிழா 8ஆம் நாள்
சித்திரை திருவிழாவின் 8ஆம் நாளான இன்று மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேக விழா நடைபெறுகிறது. கோலாகலமான இந்த விழா இரவு 7 மணியளவில் விக்னேசுவர பூஜையுடன் தொடங்கும் இந்த விழா அம்மனுக்கு பூஜைகள் நடத்தப்பட்ட பின், வைரக் கற்கள் பதிக்கப்பட்ட ‘ராயர் கிரீடம்' எனப்படும் வைர கிரீடத்திற்கு புனித நீர் அபிஷேகம் செய்யப்படும்.

பட்டாபிஷேகம்
கோவிலில் உள்ள அனுக்ஞை விநாயகரிடம் இருந்து செங்கோலும், கிரீடமும் பெறப்பட்டு, இரவு 7.40 மணியளவில் மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம் சூட்டப்படும். இதைத்தொடர்ந்து ரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட தங்கத்தினால் ஆன செங்கோலும், மீன் கொடியும் மீனாட்சி அம்மனுக்கு வழங்கப்படும். இதன் பிறகு அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும்.

மீனாட்சி ஆட்சி
சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர் மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக வெள்ளி சிம்மாசனத்தில் அமர்ந்து 4 மாசி வீதிகளிலும் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். அவருடன் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் வெள்ளி சிம்மாசனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இதைத்தொடர்ந்து இனி மதுரையில் 4 மாதங்களுக்கு மீனாட்சி ஆட்சி நடக்கிறது. அன்னையின் ஆட்சி மதுரையில் ஆரம்பமாகி விட்டது.

மீனாட்சி திருக்கல்யாணம்
நாளை திக் விஜயம் நடக்கிறது. இதைத் தொடர்ந்து மதுரை மட்டுமல்லாது தமிழக மக்களே ஆவலுடன் எதிர்பார்க்கும் மீனாட்சி திருக்கல்யாணம் மே 7ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தெய்வீக திருமண விழாவைக் காண லட்சக்கணக்கான மக்கள் மதுரையில் கூடுவார்கள். மே 8ஆம் தேதி கூடல் மாநகரமான மதுரையில் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications