மீனையும் தயிரையும் சேர்த்து சாப்பிட்டால் தோல் பிரச்சனை வருமா? உண்மை என்ன தெரியுமா? FACT CHECK
சென்னை: மீன் பொருட்களையும் தயிரையும் சேர்த்து சாப்பிட்டால் உடலில் தேமல் ஏற்படும், வெள்ளை புள்ளிகள் ஏற்படும் என்ற நம்பிக்கை மக்கள் இடையே நிலவி வருகிறது.
பொதுவாக உணவு தொடர்பாக பல்வேறு நம்பிக்கைகள் மக்கள் இடையே உள்ளன. ஒரு சில உணவுகள் உடல் சூடு அதிகரிக்கும் ஒரு சில உணவுகள் சாப்பிட்டால் உடல் சூடு குறையும் என்றெல்லாம் நிறைய நம்பிக்கைகள் உள்ளன.
சில உணவுகள் உடம்பிற்கு ஒப்புக்கொள்ளாது, சில வகை உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிட கூடாது என்றும் நிறைய நம்பிக்கைகள் உள்ளன.
இதில் நம்பிக்கைகள் ஆதாரமே இல்லாத பொய்கள் ஆகும்.

நம்பிக்கை
அப்படிதான் மீன் பொருட்களையும் தயிரையும் சேர்த்து சாப்பிட்டால் உடலில் தேமல் ஏற்படும், வெள்ளை புள்ளிகள் ஏற்படும் என்ற நம்பிக்கை மக்கள் இடையே நிலவி வருகிறது. அதாவது இரண்டையும் ஒன்றாக சாப்பிட்டால் உடலில் தேமல் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. மோர் சாப்பிடும் நாளில் மீன் சாப்பிட கூடாது. தயிர் சாதத்துடன் மீன் சேர்த்து சாப்பிட கூடாது என்றும் நம்பிக்கை மக்கள் இடையே உள்ளது.

இன்னொரு வதந்தி
அதேபோல் மீன், தயிர் இரண்டும் அதிக புரோட்டின் கொண்ட உணவுகள். இதை செரிக்க நேரம் எடுக்கும். இதனால் வயிற்று பிரச்சனைகள் ஏற்படும். இரண்டிலும் லேக்டோஸ் அதிகம் உள்ளதால் வயிற்று பாதிப்பு ஏற்படும். அதேபோல் Leukoderma எனப்படும் தோல் பாதிப்புகள் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் மக்கள் பலர் இரண்டையும் சேர்த்து சாப்பிடுவதை தவிர்த்து வருகிறார்கள்.

பொய்
ஆனால் இந்த நம்பிக்கைக்கு உண்மையான ஆதாரம் எதுவும் இல்லை. அதாவது இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் தோலில் வெள்ளை புள்ளிகள் ஏற்படும் என்பதற்கு ஆதாரமே இல்லை. மேலும் தோல் தொடர்பான வேறு பாதிப்புகள் ஏற்படும் என்பதற்கும் ஆதாரமே இல்லை. இது வெறும் நம்பிக்கைதான். மருத்துவ ஆதாரங்கள் இதற்கு பின் இல்லை.

வாய்ப்பே இல்லை -லாக்டோஸ்
எந்த மருத்துவரும் இது தொடர்பாக அதிகாரப்பூரவமாக தெரிவித்தது இல்லை. சிலருக்கு லாக்டோஸ் எதிர்ப்பு பாதிப்பு இருக்கும். லாக்டோஸ் உணவுகள் சாப்பிட்டால் உடனே மலம் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் வேண்டும் என்றால் மீனுடன் தயிர் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்கலாம். மற்றபடி இரண்டும் அலர்ஜி இல்லை என்று சொல்லும் யார் வேண்டுமானாலும் மீனையும், தயிரையும் சேர்த்து சாப்பிடலாம்.

Fact Check
வெளியான செய்தி
மீன் பொருட்களையும் தயிரையும் சேர்த்து சாப்பிட்டால் உடலில் தேமல் ஏற்படும், வெள்ளை புள்ளிகள் ஏற்படும் என்ற நம்பிக்கை மக்கள் இடையே நிலவி வருகிறது.
முடிவு
இது உண்மை அல்ல. இது வெறும் நம்பிக்கைதான். மருத்துவ ஆதாரங்கள் இதற்கு பின் இல்லை. எந்த மருத்துவரும் இது தொடர்பாக அதிகாரப்பூரவமாக தெரிவித்தது இல்லை.
ரேட்டிங்
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications