மீனையும் தயிரையும் சேர்த்து சாப்பிட்டால் தோல் பிரச்சனை வருமா? உண்மை என்ன தெரியுமா? FACT CHECK
சென்னை: மீன் பொருட்களையும் தயிரையும் சேர்த்து சாப்பிட்டால் உடலில் தேமல் ஏற்படும், வெள்ளை புள்ளிகள் ஏற்படும் என்ற நம்பிக்கை மக்கள் இடையே நிலவி வருகிறது.
பொதுவாக உணவு தொடர்பாக பல்வேறு நம்பிக்கைகள் மக்கள் இடையே உள்ளன. ஒரு சில உணவுகள் உடல் சூடு அதிகரிக்கும் ஒரு சில உணவுகள் சாப்பிட்டால் உடல் சூடு குறையும் என்றெல்லாம் நிறைய நம்பிக்கைகள் உள்ளன.
சில உணவுகள் உடம்பிற்கு ஒப்புக்கொள்ளாது, சில வகை உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிட கூடாது என்றும் நிறைய நம்பிக்கைகள் உள்ளன.
இதில் நம்பிக்கைகள் ஆதாரமே இல்லாத பொய்கள் ஆகும்.

நம்பிக்கை
அப்படிதான் மீன் பொருட்களையும் தயிரையும் சேர்த்து சாப்பிட்டால் உடலில் தேமல் ஏற்படும், வெள்ளை புள்ளிகள் ஏற்படும் என்ற நம்பிக்கை மக்கள் இடையே நிலவி வருகிறது. அதாவது இரண்டையும் ஒன்றாக சாப்பிட்டால் உடலில் தேமல் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. மோர் சாப்பிடும் நாளில் மீன் சாப்பிட கூடாது. தயிர் சாதத்துடன் மீன் சேர்த்து சாப்பிட கூடாது என்றும் நம்பிக்கை மக்கள் இடையே உள்ளது.

இன்னொரு வதந்தி
அதேபோல் மீன், தயிர் இரண்டும் அதிக புரோட்டின் கொண்ட உணவுகள். இதை செரிக்க நேரம் எடுக்கும். இதனால் வயிற்று பிரச்சனைகள் ஏற்படும். இரண்டிலும் லேக்டோஸ் அதிகம் உள்ளதால் வயிற்று பாதிப்பு ஏற்படும். அதேபோல் Leukoderma எனப்படும் தோல் பாதிப்புகள் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் மக்கள் பலர் இரண்டையும் சேர்த்து சாப்பிடுவதை தவிர்த்து வருகிறார்கள்.

பொய்
ஆனால் இந்த நம்பிக்கைக்கு உண்மையான ஆதாரம் எதுவும் இல்லை. அதாவது இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் தோலில் வெள்ளை புள்ளிகள் ஏற்படும் என்பதற்கு ஆதாரமே இல்லை. மேலும் தோல் தொடர்பான வேறு பாதிப்புகள் ஏற்படும் என்பதற்கும் ஆதாரமே இல்லை. இது வெறும் நம்பிக்கைதான். மருத்துவ ஆதாரங்கள் இதற்கு பின் இல்லை.

வாய்ப்பே இல்லை -லாக்டோஸ்
எந்த மருத்துவரும் இது தொடர்பாக அதிகாரப்பூரவமாக தெரிவித்தது இல்லை. சிலருக்கு லாக்டோஸ் எதிர்ப்பு பாதிப்பு இருக்கும். லாக்டோஸ் உணவுகள் சாப்பிட்டால் உடனே மலம் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் வேண்டும் என்றால் மீனுடன் தயிர் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்கலாம். மற்றபடி இரண்டும் அலர்ஜி இல்லை என்று சொல்லும் யார் வேண்டுமானாலும் மீனையும், தயிரையும் சேர்த்து சாப்பிடலாம்.

Fact Check
வெளியான செய்தி
மீன் பொருட்களையும் தயிரையும் சேர்த்து சாப்பிட்டால் உடலில் தேமல் ஏற்படும், வெள்ளை புள்ளிகள் ஏற்படும் என்ற நம்பிக்கை மக்கள் இடையே நிலவி வருகிறது.
முடிவு
இது உண்மை அல்ல. இது வெறும் நம்பிக்கைதான். மருத்துவ ஆதாரங்கள் இதற்கு பின் இல்லை. எந்த மருத்துவரும் இது தொடர்பாக அதிகாரப்பூரவமாக தெரிவித்தது இல்லை.
ரேட்டிங்
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications