Fact Check: உபி.-யில் 5 ஆண்டுகளாக கலவரங்கள் இல்லையா? குற்றப்பதிவு அறிக்கை சொல்வது என்ன? உண்மை என்ன?
சென்னை: கடந்த 5 ஆண்டுகளாக உத்தரப் பிரதேசத்தில் எந்த கலவரமும் நடைபெறவில்லை என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உண்மையில் உ.பி.யில் கலவரங்கள் குறித்து தேசிய குற்றப்பதிவு ஆவண காப்பக அறிக்கை சொல்வது என்ன என்பதை பார்க்கலாம்.
அண்மையில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநிலத்தில் கடந்த ஐந்தரை ஆண்டுகளாக எந்த கலவரமும் நடைபெறவில்லை. நமது மாநிலம் அதிகப்படியான முதலீடுகளை பெறத் தொடங்கியுள்ளது. வேலைவாய்ப்புகள் பெருகி வருகின்றன. வர்த்தகர்கள் மற்றும் தொழில் முனைவோரின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டோம்.
அவர்களின் பாதுகாப்பு மீறப்படுவதை அரசு ஒருபோதும் அனுமதிக்காது. உத்தரபிரதேசம் முற்றிலும் கலவரம் இல்லாத மாநிலமாகவும், குற்றம் இல்லாத மாநிலமாகவும் மாறிவிட்டதாக பேசி இருந்தார். இது மக்களிடையே பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பதிவான குற்ற வழக்குகள் குறித்து தேசிய குற்றப்பதிவு ஆவண காப்பக அறிக்கைகளில் தகவல் சரிபார்க்கப்பட்டன.

கலவர வழக்குகள்
தேசிய குற்றப் பதிவு பணியக தரவுகளின் அடிப்படையில், உத்தரப் பிரதேசத்தில் 2017-21ம் ஆண்வு வரை 35 ஆயிரத்து 40 கலவர வழக்குகள் பதிவாகியுள்ளன. இதன்மூலம் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியது தவறு என்பது தெரிய வருகிறது. அதேபோல் 2021ல் மட்டும் 5 ஆயிரத்து 302 கலவர வழக்குகள் பதிவாகியுள்ளன.

35 கலவரங்கள்
அதேபோல் 2017ல் 8 ஆயிரத்து 990 வழக்குகளும், பதிவாகியுள்ளன. 2017ம் ஆண்டோடு, 2021ம் ஆண்டு ஒப்பிட்டு பார்த்தால் வழக்குகள் 41 சதவிகிதம் குறைந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், கலவரங்களில் பலியானவர்களின் எண்ணிக்கையும் 49% குறைந்து 2021ல் 5,846 ஆக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் 2017 முதல் 2021 வரை 35 கலவர வழக்குகள் பதிவாகியுள்ளது.

உண்மை என்ன?
அதேபோல் மாநிலத்தில் வகுப்புவாத கலவரங்கள் 2017 முதல் 2021 வரை 97% குறைந்துள்ளது. உண்மையில், 2018, 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் உத்தரப் பிரதேசத்தில் எந்த வகுப்புக் கலவரமும் இல்லை என்றே தேசிய குற்றப் பதிவுப் பணியக அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

கலவரங்கள் குறைவு
தேசிய குற்றப்பதிவு பணியகம் கலவர சம்பவங்களை வகுப்புவாதம், மதவெறி, சாதிய மோதல், விவசாயம், தொழில்துறை மற்றும் அரசியல் என 15 வெவ்வேறு பிரிவுகளாக வகைப்படுத்துகிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜக அரசு ஆட்சியமைத்த பின்னர், அனைத்து வகை கலவரங்களும் கிட்டத்தட்ட குறைந்துள்ளது. ஆனால் பகை அல்லது தொழில் போட்டி தொடர்பான கலவரங்கள் சுமார் 55 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

பொய்
தேசிய குற்றப்பதிவு பணியகத்தின் அறிக்கைபடி, உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு பின் கடந்த ஆண்டுகளில் கலவரங்கள் குறைக்கப்பட்டிருந்தாலும், கலவரங்களே நடைபெறவில்லை என்ற முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வார்த்தைகள் பொய் என்றே தெரிய வருகிறது.

Fact Check
வெளியான செய்தி
கடந்த 5 ஆண்டுகளில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கலவரங்கள் நடக்கவில்லை என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறி வருகிறார். இதனை பாஜக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
முடிவு
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் கலவரங்கள் நடைபெறவில்லை என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். ஆனால் 2017 முதல் 2021 வரை 35 ஆயிரத்திற்கும் அதிகமான கலவர வழக்குகள் பதிவாகியுள்ளது
ரேட்டிங்
-
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு -
Rasi Palan: மகரம், கும்பம், மீனம் ராசிக்கான மார்ச் மாத பலன்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போவது யார்? -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்? -
ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல்.. மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.. தேர்தல் ஆணையம்












Click it and Unblock the Notifications