காங். அரசின் நலத் திட்டங்களை பார்த்து வெளிநாட்டவர் அதிசயிக்கின்றனர்: ராகுல் காந்தி

டெல்லி மாநில சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை இன்று தொடங்கி வைத்து பேசிய ராகுல் காந்தி, உணவு பாதுகாப்பு மசோதாவுக்காக பணத்தை நாங்கள் வீணாக செலவழிக்கிறோம் என்று எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் நாங்கள் சொல்லுகிறோம் மக்களுக்கு உணவு கொடுப்பது என்பது பணத்தை வீணாக்குவதாகாது.
முன்பெல்லாம் மக்கள் வளர்ச்சித் திட்டங்களைப் பற்றி பேசுவார்கள்.. இப்போதெல்லாம் உரிமைகளைப் பற்றி பேசுகின்றனர்.. அந்த வகையில் மக்களின் உணவு உரிமைக்கு நாங்கள் முன்னுரிமை கொடுத்திருக்கிறோம். வெளிநாட்டவர் எங்களை சந்திக்கும் போதெல்லாம் உணவு உத்திரவாத திட்டம், வேலைவாய்ப்பு உறுதி திட்டம் போன்றவற்றை பார்த்து அதிசயிக்கின்றனர். அவர்கள் ஆச்சரியம் தெரிவிக்கின்றனர்.
டெல்லி மாநிலம் எத்தகைய உட்கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது என்பதை இந்த தேசம் நன்கு அறியும். இது காங்கிரஸால் நிகழ்ந்தது. காங்கிரஸால் மட்டுமே சாத்தியமானது. நாங்கள் இல்லையெனில் சாத்தியமே இல்லை. டெல்லியில் காங்கிரஸ் அரசு எத்தனை மேம்பாலங்களை கட்டியுள்ளது? எப்படியான சாலை வசதிகளை கொண்டிருக்கிறது? மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தியிருப்பதை இந்த நாடே நன்கு அறியும்.
கிராமங்களில் இருந்து டெல்லிக்கு ஒருநாளேனும் வந்து செல்வோருக்கு அவர்களது அனைத்து கனவுகளையும் நாங்கள் நிறைவேற்றித்தர காத்திருக்கிறோம் என்றார்.
லோக்சபா தேர்தலையொட்டி ஜெய்ப்பூரில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தப்படும் நரேந்திர மோடி பேசிய அதே நேரத்தில் டெல்லியில் காங்கிரஸின் பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தப்படும் ராகுல் காந்தியும் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications