ராணுவத்தில் சேர்வது உங்கள் கனவா? இதோ ஒரு அரிய வாய்ப்பு! வேலூரில் ஆள்சேர்ப்பு முகாம்! தகுதிகள் என்ன?
சென்னை : சென்னையில் உள்ள இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு நடத்தும் அலுவலகம் சார்பில், வேலூர் மாநகரில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகத்தில், வருகிற 15ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம் நடக்கிறது.
இந்த முகாமில் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்க தகுதிபடைத்தவர்கள். இந்த முகாமில், இந்திய ராணுவத்திற்கு தேவையான 'அக்னிவீரர்' (ஆண்கள்), அக்னி வீரர் (பெண்கள் ராணுவ போலீஸ்), சிப்பாய் தொழில்நுட்பம், செவிலியர் உதவியாளர் (கால்நடை மருத்துவம்) மற்றும் ஜூனியர் கமிஷன் அதிகாரி (மத போதகர்) தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அந்தந்தப் பதவிகளுக்கு பொருந்தக் கூடிய மற்றும் தகுதி அளவுகோல்களின்படி அறிவிப்பில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் விண்ணப்பதாரர்கள் கட்டாயமாக கொண்டு வர வேண்டும்.
அத்துடன் இந்த ஆவணங்கள் அனைத்தையும் www.joinindianarmy.nic.inஎன்ற இணையதள முகவரியில் பதி வேற்றம் செய்திருக்கவேண்டும். தகுதி உடையவர்கள் முறையாக தகுதியின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். இதற்காக விண்ணப்பதாரர்கள் முகவர்களையோ,ஏஜென்சிகளையோ நாடி செல்ல வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications