தயாரிப்பாளர் சங்கத்திற்கு வைத்த சீலை அகற்ற ஹைகோர்ட் உத்தரவு.. மீண்டும் விஷால் கையில் சங்கம்
தயாரிப்பாளர் சங்கத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் விஷால் முறையீடு செய்துள்ளார்.
Recommended Video

சென்னை: தயாரிப்பாளர் சங்கத்திற்கு சீல் வைக்கப்பட்டதை கண்டித்த சென்னை உயர்நீதிமன்றம் சீலை அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து அரசு வைத்த சீல் அகற்றப்பட்டது.
தயாரிப்பாளர் சங்கத்தில் நிரந்தர வைப்புத் தொகையான 7 கோடி ரூபாயில் விஷால் முறைகேடு செய்துவிட்டதாக 150க்கும் அதிகமான உறுப்பினர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இதனால் சிலர் இரண்டு நாட்களுக்கு முன் தி. நகரில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டனர்.
தயாரிப்பாளர் சங்கத்தின் அலுவலகத்தின் பூட்டை உடைக்க முயற்சித்த காரணத்தால் நடிகர் விஷால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட விஷால் 8 மணி நேரத்திற்கு பின் மாலை விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து ஹைகோர்ட்டில் விஷால் சார்பில் மனு செய்யப்பட்டது.

நேற்றே கூறினார்
நேற்று நீதிமன்றத்தை நாடப்போவதாக விஷால் தெரிவித்து இருந்தார். செய்யாத குற்றத்துக்கு தண்டனை அனுபவித்துள்ளேன். நான் நீதித்துறையை நம்புகிறேன். காவல்துறையின் நடவடிக்கையை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்வேன் என்று கூறினார்.

முறையற்ற கைது
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விஷால் முறையீடு செய்திருந்தார். அதில், தன்னுடைய கைது தவறானது என்று கூறியிருந்தார். தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் மீது சட்ட விரோதமாக நடவடிக்கை எடுப்பதை எதிர்த்தும் முறையீட்டில் கூறியிருந்தார்.

சீலுக்கு எதிர்ப்பு
தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு சீல் வைத்தது தவறு. தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிளை அனுமதிக்காதது சட்டவிரோதமானது. சங்க அலுவலகத்திற்கு முறையின்றி சீல் வைத்து இருக்கிறார்கள். உடனே சங்கத்தின் கதவுகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.

விசாரணை முடிவு
இதை இன்று பிற்பகல் ஹைகோர்ட் விசாரித்தது. விசாரணையின் இறுதியில் போலீஸாரின் நடவடிக்கை தவறு என்று உத்தரவிட்ட கோர்ட், உடனடியாக சீலை அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து சங்க அலுவலகத்திற்கு விஷால் உள்ளிட்டோர் சென்றனர். ஏற்கனவே போடப்பட்ட பூட்டை உடைத்து தூக்கி எறிந்தார் விஷால். அதன் பின்னர் நிர்வாகிகள் அலுவலகத்திற்குள் சென்றன்ர்.
இப்படியாக 2 நாள் டிராமா நல்லபடியாக முடிவுக்கு வந்தது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி!












Click it and Unblock the Notifications