மகேஷ் பூபதியுடன் இணைந்து விளையாட வெய்ன் பெரைரா, போர்க்மேன் விருப்பம்
புது தில்லி:
இந்தியாவின் முதல் நிலை ஆட்டக்காரர் லியாண்டர் பயஸிடமிருந்து பிரிந்துவிட்டதால் தங்களுடன் இணைந்துவிளையாட வரும்படி மகேஷ் பூபதிக்கு வெய்ன் பெரைரா, போர்க்மேன் ஆகியோரிடமிருந்து அழைப்புவந்துள்ளது.
தொடர்ந்து 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் விளையாடி அதில் இரு போட்டிகளில்கோப்பையை வென்று உலகின் முதல் டென்னிஸ் இரட்டையர் ஜோடி என்ற பெருமையைப் பெற்ற இந்திய வீரர்கள்லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி இருவரும் தங்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.
மகேஷ் பூபதியை விட்டுப் பிரிந்ததற்கு அவரது பயிற்சியாளர் என்ரிகோ பிபர்னோதான் காரணம் என்றுதெரிவித்துள்ள லியாண்டர் பயஸ், இனி வரும் இரட்டையர் ஆட்டங்களில் ஜான் சிமெரின்க் என்பவருடன்இணைந்து விளையாட உள்ளார். மகேஷின் பயிற்சியாளர் பிபர்னோ நீடிக்கும் வரை மகேஷுடன் தான் இணைந்துவிளையாடுவது சாத்தியமில்லை என்றும் பயஸ் தெரிவித்துள்ளார்.
இந் நிலையில், தங்களுடன் இரட்டையர் போட்டிகளில் இணைந்து விளையாட வரும்படி தென் ஆப்பிரிக்காவின்வெய்ன் பெரைரா மற்றும் ஸ்வீடனின் போர்க்மேன் ஆகியோரிடமிருந்து அழைப்பு வந்துள்ளதாக மகேஷ் பூபதிதெரிவித்துள்ளார். தற்போது ஜெர்மனியின் மைக் நவ்லெஸ்ஸுடன் மகேஷ் பூபதி இணைந்து விளையாடிவருகிறார்.
இதற்கிடையே தன் மீது லியாண்டர் பயஸ் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பிபர்னோ வருத்தம் தெரிவித்துள்ளார்.மகேஷும், லியாண்டரும் மீண்டும் இணைய வாய்ப்பு ஏற்பட்டால், மகேஷின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்துவிலகத் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
யு.என்.ஐ.