தமிழகத்தில் இன்று
விமானக் கடத்தல்காரர்களைப் பிடிக்க இன்டர்போல் உதவியை நாடியது சி.பி.ஐ.
டெல்லி:
காத்மாண்டுவிலிருந்து ஆப்கானிஸ்தானுக்குக் கடத்தப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமான கடத்தல்காரர்கள் குறித்து பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்டபல நாடுகளில் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடுமாறு இன்டர்போல் போலீஸுக்கு, சி.பி.ஐ கோரிக்கை வைத்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி டெல்லி வந்து கொண்டிருந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஆப்கானிஸ்தானுக்குக் கடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில்ஒரு பயணி கொல்லப்பட்டார். ஐ.நா. பிரதிநிதிகள் தலையீட்டின் பேரில் பயணிகள் விடுவிக்கப்பட்டனர். இதற்கு மாற்றாக மூன்று தீவிரவாதிகளைஇந்தியா விடுவித்தது. 31-ம் தேதி ஹைஜாக் டிராமா முடிவுக்கு வந்தது.
இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. நேபாளம், இந்தியாவில் தற்போது விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் விமானக்கடத்தல்காரர்களைப் பிடிப்பதற்காக தற்போது இன்டர்போல் போலீஸை சி.பி.ஐ. அணுகியுள்ளது.
இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை இன்டர்போலுக்கு முறையான கோரிக்கை அனுப்பப்பட்டது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்துஆகிய நாடுகளில் உள்ள இன்டர்போல் போலீஸ் மூலம் கடத்தல்காரர்களைப் பிடிக்க உதவ வேண்டும் என்று அதில் கோரப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளிலும் இதுதொடர்பாக எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடுமாறும் இன்டர்போலுக்கு, சி.பி.ஐ. வேண்டுகோள் விடுத்துள்ளது.
கடத்தில் சம்பந்தப்பட்ட ஐந்து கடத்தல்காரர்களும் பாகிஸ்தானில் ஒளிந்திருப்பதாக சந்தேகம் உள்ளது. இப்பினும் இன்டர்போல் மூலம் முறையாக இதைஅணுக சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு பாட்டியாலா சிறப்பு சி.பி.ஐ நீதிமன்றத்தில் கடத்தல்காரர்கள், இப்ராகிம் அக்தர், சன்னி அகமது குவாசி, ஷாகூர் இப்ராகிம்,ஷாஹித் அக்தர் சையத் மற்றும் ஷகீர் ஆகியோரைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பக்கப்பட்டது. இதையடுத்து இன்டர்போல் உதவியை நாட சி.பி.ஐ. முடிவுசெய்ததது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications