தமிழகத்தில் இன்று
விமானக் கடத்தல்காரர்களைப் பிடிக்க இன்டர்போல் உதவியை நாடியது சி.பி.ஐ.
டெல்லி:
காத்மாண்டுவிலிருந்து ஆப்கானிஸ்தானுக்குக் கடத்தப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமான கடத்தல்காரர்கள் குறித்து பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்டபல நாடுகளில் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடுமாறு இன்டர்போல் போலீஸுக்கு, சி.பி.ஐ கோரிக்கை வைத்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி டெல்லி வந்து கொண்டிருந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஆப்கானிஸ்தானுக்குக் கடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில்ஒரு பயணி கொல்லப்பட்டார். ஐ.நா. பிரதிநிதிகள் தலையீட்டின் பேரில் பயணிகள் விடுவிக்கப்பட்டனர். இதற்கு மாற்றாக மூன்று தீவிரவாதிகளைஇந்தியா விடுவித்தது. 31-ம் தேதி ஹைஜாக் டிராமா முடிவுக்கு வந்தது.
இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. நேபாளம், இந்தியாவில் தற்போது விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் விமானக்கடத்தல்காரர்களைப் பிடிப்பதற்காக தற்போது இன்டர்போல் போலீஸை சி.பி.ஐ. அணுகியுள்ளது.
இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை இன்டர்போலுக்கு முறையான கோரிக்கை அனுப்பப்பட்டது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்துஆகிய நாடுகளில் உள்ள இன்டர்போல் போலீஸ் மூலம் கடத்தல்காரர்களைப் பிடிக்க உதவ வேண்டும் என்று அதில் கோரப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளிலும் இதுதொடர்பாக எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடுமாறும் இன்டர்போலுக்கு, சி.பி.ஐ. வேண்டுகோள் விடுத்துள்ளது.
கடத்தில் சம்பந்தப்பட்ட ஐந்து கடத்தல்காரர்களும் பாகிஸ்தானில் ஒளிந்திருப்பதாக சந்தேகம் உள்ளது. இப்பினும் இன்டர்போல் மூலம் முறையாக இதைஅணுக சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு பாட்டியாலா சிறப்பு சி.பி.ஐ நீதிமன்றத்தில் கடத்தல்காரர்கள், இப்ராகிம் அக்தர், சன்னி அகமது குவாசி, ஷாகூர் இப்ராகிம்,ஷாஹித் அக்தர் சையத் மற்றும் ஷகீர் ஆகியோரைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பக்கப்பட்டது. இதையடுத்து இன்டர்போல் உதவியை நாட சி.பி.ஐ. முடிவுசெய்ததது.
யு.என்.ஐ.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications