For Daily Alerts
Just In
இந்தியா- வியட்நாம் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து
ஹனோய்:
இந்தியாவும், வியட்நாமும் கலை இலக்கியம், சுற்றுலா, அணுசக்தித் துறையில் இணைந்து செயல்படுவது என திங்கள்கிழமை ஒப்பந்தம் செய்து கொண்டன.
இரு நாடுகளிலும் சுற்றுலாத் துறை அலுவலகங்கள் திறக்கப்படும். அந்த அலுவலகங்கள் சுற்றுலா தொடர்பான அனைத்து விஷயங்களிலும் தங்களதுகருத்துக்களை பரிமாறிக் கொள்ளும். கலை இலக்கியம், அதன் வளர்ச்சி, பண்பாடு ஆகியவற்றிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்படும்.
இந்த ஒப்பந்தங்கள் வியட்நாம் சுற்றுலாத்துறை செயலாளர் பெஸ்பாரூவா முன்னிலையில் கையெழுத்தானது.
யு.என்.ஐ.
Story first published: Monday, January 8, 2001, 5:30 [IST]