ஆன்மிக யாத்திரை செல்கிறார் ஜாமீனில் வெளி வந்த சுதாகரன்
சென்னை:
"திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி கோவிலுக்கும, திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கும் ஆன்மிகயாத்திரை செல்கிறேன். அது முடிந்த பின்பே சென்னைக்கு திரும்புவேன்" என்று வருமானத்திற்கு அதிகமாக சொத்துசேர்த்த வழக்கில் ஜாமீனில் விடுதலையாகியுள்ள ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன்கூறியுள்ளார்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, சுதாரகன் மீது வழக்கு தொடரப்பட்டு பாளையங்கோட்டைசிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அவர் மீது தொடரப்பட்ட பிற வழக்குகளில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம்உத்தரவிட்டிருந்தது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கிலும் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்என்று கோரி சுதாகரன் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த சென்னைமுதலாவது தனி நீதிமன்ற நீதிபதி ஆறுமுகபெருமாள் சுதாகரனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இதன்படி, சுதாகரன் ரூ.50 ஆயிரத்திற்கான சொந்த ஜாமீனும், அதே தொகைக்கான இரு நபர் ஜாமீனும் செலுத்தவேண்டும். ஜாமீனில் இருக்கும் காலத்தில், ஒவ்வொரு மாதமும் முதல் வேலை நாளன்று அவர் வழக்கு விசாரணைநடைபெறும் லஞ்ச ஒழிப்புத்துறை புலன் விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து சுதாரகன் ஜாமீனில் விடுதலையானார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்கூறியதாவது:
புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள பன்னீர் செல்வத்திற்கு உங்கள் மூலம் நான் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். அவரை சந்திப்பது பற்றி பின்னர் முடிவெடுப்பேன்.
ஜெயலலிதாவை முதல்வராக நியமித்தது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது தர்மத்திற்கு கிடைத்தவெற்றி. நீதிக்கு தலைவணங்குபவர்கள் அனைவருக்கும் கிடைத்த வெற்றி.
பாளையங்கோட்யிைலிருந்து திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி கோவிலுக்கும், திருச்செந்தூர் முருகன்கோவிலுக்கும் ஆன்மிக யாத்திரை செல்கிறேன்.
அதன் பின்புதான் சென்னை செல்வேன். சென்னையில் என் தாயாரை சந்தித்து ஆசி பெறுவேன். பின் என்மனைவியையும், குழந்தைகளையும் சந்திப்பேன்.
உள்ளாட்சி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசித்த பின்புஅறிவிப்பேன்.
யாராக இருந்தாலும் உயர் பதவிக்கு வரும் யோகம் இருந்தால் அதை தடுக்க எவராலும் முடியாது. நான் முதல்வராகமுடியுமா என்பது பற்றி என் ஜாதகத்தை பார்த்தால்தான் தெரியும் என்றார் சுதாகரன்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications