வீரப்பன் தேடுதல் வேட்டை: மத்திய படை விலகியது
அந்தியூர்:
சந்தன மரக்கடத்தல் வீரப்பனை பிடிக்கும் பணியில் தமிழக-கர்நாடக அதிரடிப் படையுடன் இணைந்து செயல்பட்டுவந்த எல்லை பாதுகாப்பு படையினரை (பி.எஸ்.எப்) மத்திய அரசு திரும்ப அழைத்துவிட்டது.
இதையடுத்து எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று முதல் தங்கள் முகாம்களை காலிசெய்து விட்டு புறப்பட்டுசெல்லத் தொடங்கியுள்ளனர்.
சென்ற ஆண்டு பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்சிச் சென்று 108 நாட்கள் பிணைக் கைதியாகவைத்திருந்து விட்டு விடுதலை செய்தார். இதையடுத்து வீரப்பனை பிடிக்கும் பணியில் சிறப்பு அதிரடிப்படையினர்தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
கடந்த திமுக ஆட்சியில், மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வீரப்பனை பிடிக்கும் பணியில்அதிரடிப்படையினருடன் இணைந்து செயல்பட எல்லைப் பாதுகாப்புப் படையை அழைத்துவந்தது.
வட மாநிலங்களிலுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்தும் எல்லை பாதுகாப்பு படையினர் வீரப்பனை தேடும் பணிக்காககடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஈரோடு வந்தனர்.
வீரப்பன் பதுங்கியுள்ள காட்டுப் பகுதியான சத்தியமங்கலம், கடம்பூர், அந்தியூர். தட்டக்கரை உள்ளிட்டபகுதிகளுக்கு சென்று, சிறப்பு அதிரடிப்படையினருடன் இணைந்து எல்லை பாதுகாப்பு படையினரும் வீரப்பன்தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் அமெரிக்கா மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து இந்தியாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள்பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதனால் சத்தியமங்கலம் பகுதியில் வீரப்பனை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்பு படையினரைமத்திய அரசு திரும்ப அழைத்துள்ளது. இவர்கள் காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பணியில் ஈடுபட உள்ளனர்.
இதையடுத்து சத்தியமங்கலம், திம்பம், பன்ணாரி, குண்டேரிபள்ளம், அந்தியூர் காட்டுப்பகுதியிலிருந்த எல்லைபாதுகாப்பு படையினரும், கோவை காட்டுப் பகுதியிலிருந்த எல்லை பாதுகாப்பு படையினரும் தங்கள் முகாம்களைகாலி செய்து விட்டு புறப்பட தயாராகியுள்ளனர்.
இவர்கள் அடுத்த சில நாட்களில் ரயில் மூலம் வட மாநிலங்களுக்கு செல்லவிருக்கின்றனர். பன்ணாரி முகாமிலிருந்தஎல்லை பாதுகாப்பு படையினர் இன்று (திங்கள் கிழமை) புறப்பட்டு செல்கின்றனர்.
உள்துறை செயலாளர் பேட்டி:
இது குறித்து தமிழக உள்துறை செயலாளர் நரேஷ் குப்தா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
எல்லை பாதுகாப்பு படையினர் திரும்ப அழைக்கப்பட்டிருப்பதால் வீரப்பனை பிடிக்கும் பணியில் எந்தபின்னடைவும் ஏற்படாது.
தமிழக சிறப்பு போலீஸ் படையின் இரண்டு கம்பெனிகள் வீரப்பனை தேடி பிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படும்என்றார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications