புலிகள் விவகாரம்: ஜெயாவுடன் வாஜ்பாய் ஆலோசனை
சென்னை:
விடுதலைப்புலிகள் மற்றும் இலங்கை அரசுக்கு இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை உள்ளிட்டபல்வேறு பிரச்சனைகள் குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் பிரதமர் வாஜ்பாய்தொலைபேசியில் பேசினார்.
இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா இந்தியாவில் 4 நாள் அரசுமுறை பயணம்மேற்கொண்டுள்ளார். நேற்று அவர் துணைப் பிரதமர் அத்வானியைச் சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில் இன்று காலை டெல்லியில் வாஜ்பாயை சந்தித்துப் பேசினார் சந்திரிகா. சந்திரிகாவைச்சந்திப்பதற்கு முன் இலங்கை பிரச்சனைகள் குறித்து ஜெயலலிதாவின் கருத்துக்களை வாஜ்பாய்கேட்டறிந்தார்.
ஜெயலலிதாவிடம் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்திய வாஜ்பாய், இலங்கை அமைதிப்பேச்சுவார்த்தை, அங்கு தமிழர்களை மீண்டும் குடியமர்த்துவது, தமிழகத்தில் உள்ள தமிழ் அகதிகளைஅந்நாட்டிற்கு எவ்வாறு அனுப்புவது ஆகியவை குறித்து பேசினார்.
இலங்கை மீனவர்களும், கடற்படையினரும் அடிக்கடி தமிழக மீனவர்களைக் கடத்திச் சென்றுஅந்நாட்டு சிறைகளில் அடைக்கப்படுவது குறித்து அப்போது வாஜ்பாயிடம் தெரிவித்தஜெயலலிதா, இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று கேட்டுக் கொண்டார்.
மேலும் புலிகள் விஷயத்தில் தமிழக அரசின் நிலை குறித்து வாஜ்பாயிடம் ஜெயலலிதா எடுத்துக்கூறினார். புலிகள் மீதான தடையை மத்திய அரசு நீக்கவே கூடாது என்றும், இத்தடையைத் தொடர்ந்துநீடிக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் புலிகளை ஆதரித்துப் பேசியதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசியஇயக்கத் தலைவர் நெடுமாறன் ஆகியோரை பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு கைது செய்துசிறையில் அடைத்துள்ளது என்பதும் நினைவுகூறத்தக்கது.
தடையை நீக்க புலிகள் கோரிக்கை:
இதற்கிடையே தங்கள் மீதான தடையை நீக்கிக் கொள்ள வேண்டும் என்று இந்தியாவுக்கும்அமெரிக்காவுக்கும் புலிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஜெனீவாவில் உள்ள புலம் பெயர்ந்த தமிழர்களிடையே பேசும்போது புலிகளின் அரசில்ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கம் இவ்வாறு பேசியதாக இலங்கையில் வெளியாகும் "தமிழ்கார்டியன்" பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களை இந்தியா மறந்துவிட வேண்டும். இலங்கைதமிழ் மக்களின் நல்வாழ்வுக்காக தற்போது நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில்இந்தியாவும் கலந்து கொள்ள வேண்டும்" என்று பாலசிங்கம் கூறியதாக அந்தப் பத்திரிக்கைகூறியுள்ளது.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications