இந்து முன்னணிக்கு வைகோ கண்டனம்
சென்னை:
திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தைத் தாக்கிய இந்து முன்னணி அமைப்பினருக்கு மதிமுகபொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருப்பூரில் விநாயகர் சிலை உடைக்கப்பட்டதாகக் கூறி இந்து முன்னணியினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். கொடிக் கம்பங்கள் வெட்டி சாய்த்துள்ளனர். அலுவலகங்களை தீவைத்துக் கொளுத்தியுள்ளனர்.
அதோடு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் கட் அவுட்டை அவமானப்படுத்தியுள்ளனர். இதுபோன்றசம்பவங்களால் திருப்பூர் பொதுமக்களிடையே பதற்றமும் பீதியும் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மதவெறியைத் தூண்டிவிட்டு குளிர்காய நினைக்கும் இந்து முன்னணியினரை கடுமையாகக்கண்டிக்கிறேன்.
இத்தகைய நடவடிக்கைகளை அடக்கவும், பொதுமக்களின் பீதியைப் போக்கவும் போலீஸார் நடவடிக்கைமேற்கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
இந்து முன்னணியின் சத்யாகிரக போர்:
இதற்கிடையே சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் சத்யாகிரக ஊர்வலம் நடத்தப்போவதாக இந்து முன்னணிதலைவர் ராமகோபாலன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
ஐஸ் ஹவுஸ் மசூதி ஏதோ பாதுகாக்கப்பட்ட பகுதி போல் அங்கு ஊர்வலம் செல்ல அனுமதி மறுக்கின்றனர். அந்தஇடத்தில் 100க்கும் மேற்பட்ட இந்துக் கோவில்கள் உள்ளன. அங்கு மசூதியைக் கட்ட அனுமதித்தது இந்துபெரியவர்களின் பெருந்தன்மையாகும்.
திருவல்லிக்கேணியில் ஊர்வலத்திற்கு அனுமதிக்காதது முஸ்லீம் தீவிரவாதிகளுக்கு ஊக்கம் அளித்ததுபோலாகிவிடும். எனவே திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலைக் காக்கும்பொருட்டு இன்று மாலை சத்யாகிரகஊர்வலம் நடத்தவிருக்கிறேன். விநாயகர் சிலையை கையில் ஏந்தியவாறு திருவல்லிக்கேணி சாலையில் நடந்துசெல்லவுள்ளேன்.
இந்த ஊர்வலம் சில நாட்களுக்கு நடக்கும். போலீஸார் கைது செய்யும்வரை நடந்து செல்வோம். இந்தஊர்வலத்தில் பிரச்சினை ஏற்படாமல் இருக்க விரும்பினால், அந்தப் பகுதி முஸ்லீம் பெரியவர்கள் எங்களைஅழைத்துச் செல்லட்டும்.
சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு பயப்படுவது போல் போலீஸ் இவர்களைக் கண்டு ஏன் பயப்படுகிறது. விநாயகர்ஊர்வலத்திற்கு 2 மாதத்திற்கு முன்பே அனுமதி கேட்டும் கிடைக்கவில்லை. ஜெயலலிதா முதல்வராகஇருக்கும்போதே நீதி கிடைக்காவிட்டால் எப்போதும் அது கிடைக்காது என்று ராமகோபாலன் கூறினார்.
-
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்












Click it and Unblock the Notifications