400 விக்கெட்: கும்ப்ளேவுக்கு சென்னையில் பாராட்டு
சென்னை:
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய அனில் கும்ப்ளேவுக்கு சென்னையில் பாராட்டுவிழா நடந்தது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணி வீரர்கள்நேற்றிரவு சென்னை வந்தனர். தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ள அவர்களுக்கு அங்குசிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
பின்னர் அனில் கும்ப்ளேவைப் பாராட்டும் வகையில் 400 என்று வடிவமைக்கப்பட்டிருந்த கேக்வைக்கப்பட்டிருந்தது.
இந்த கேக்கை வெட்டிய கும்ப்ளே அதனை தனது மனைவி சேத்னா, குழந்தை மற்றும் சக வீரர்கள், ஹோட்டல்ஊழியர்களுக்கு வழங்கினார்.
கையில் காயமடைந்துள்ள சச்சின் டெண்டுல்கரும் சென்னை வந்துள்ளார். ஆனால் ஹோட்டலில்செய்தியாளர்களிடம் பேச மறுத்த சச்சின் நேராக தனது அறைக்குச் சென்று விட்டார்.
ஆஸ்திரேலிய அணி வீரர்களும் நேற்றிரவே சென்னை வந்துவிட்டனர். இன்று காலை முதல் இரு அணி வீரர்களும்சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளனர். 14ம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டிதொடங்குகிறது.
இதையொட்டி சென்னையில் 5,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மேலும் போட்டிநடக்கும் சேப்பாக்கம் மைதானத்துக்கு நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்புப் பேருந்துகளும்இயக்கப்படவுள்ளன.
45,000 இருக்கைகள் கொண்ட சேப்பாக்கம் மைதானத்துக்கு சுமார் 35,000 பார்வையாளர்கள் வருவார்கள் எனபோலீசார் எதிர்பார்ப்பதாக மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், கிரிக்கெட் மைதானத்தில் வாகனங்களை நிறுத்த 1,500 வாகன பாஸ்கள்வழங்கப்படவுள்ளன. போட்டியை ஒட்டி வாலாஜா ரோடு சாலையில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்படும்.சென்னை ரசிகர்கள் மிகவும் அறிவுப்பூர்வமானவர்கள். இதனால் போட்டியின்போது இடையில் பிரச்சனை வராதுஎன்று நினைக்கிறேன்.
கிரிக்கெட்டை வைத்து சூதாட்டம் நடத்தும் கும்பலை கண்காணிக்கவும் தனிப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.மைதானத்துக்குள் செல்லும் பார்வையாளர்களை போலீசார் தீவிரமாக சோதனையிடுவர் என்றார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications