சரக்கு விமானங்கள் கோரும் ஐ.நா சபை
ஜகார்த்தா:
![]() |
சுனாமி அலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்ப கார்கோ விமானங்களைத் தந்து உதவுமாறுஅமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு ஐ.நா. சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
சுனாமி அலையால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவ ஜெர்மனி 668 மில்லியன் டாலர்களைத் தருவதாகக் கூறியுள்ளது. உலகநாடுகள் அறிவித்த நிவாரணத் தொகையில் இதுவே அதிகத் தொகையாகும்.
இதற்கு அடுத்ததாக ஜப்பானும் (500 மில்லியன் டாலர்களும்), அமெரிக்காவும் (350 மில்லியன் டாலர்கள்) அதிக நிதி அளித்தநாடுகள் வரிசையில் 2வது, 3வது இடங்களைப் பெறுகின்றன.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்ல சி-17 கார்கோ விமானங்களை தந்துஉதவுமாறு அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளை ஐ.நா. சபை கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த ரக விமானங்கள் குறைந்த தூர விமான ஓடுபாதையில் இயங்கும் திறனும், 60 டன் வரை பொருட்களை ஏற்றிச் செல்லும்வல்லமையும் படைத்தவை.
இந் நிலையில் பன்டா ஏசே விமான நிலைய ஓடுபாதையில், கார்கோ விமானமும் எருமை மாடும் மோதிக் கொண்டதில் ஓடுபாதைசேதமடைந்தது. இதை சரிப்படுத்த கிரேன் மற்றும் புல்டோசர்கள் தேவைப்படுவதாக ஐ.நா. சபை கூறியுள்ளது.
இதற்கிடையே இலங்கையின் கிழக்குப் பகுதியில் அம்பாறை மாவட்டத்தில் கன மழை காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்குஉணவு மற்றும் மருந்துப்பொருட்கள் கொண்டு செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் மட்டும் 8,000 பேர்இறந்துள்ளனர்.
கலாமிடம் உலக தலைவர்கள் இரங்கல்:
இந் நிலையில் உலக நாடுகளின் தலைவர்கள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிற்கு இரங்கல் செய்தி அனுப்பியுள்ளனர்.
லிபியா அதிபர் மெளம்மர் அல் கடாபி, எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக், ஜோர்டான் அரசர் அப்துல்லா ஆகியோர் இந்தியாவில்சுனாமி அலையால் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்து கலாமிற்குக் கடிதம் அனுப்பியுள்ளனர்.
அதேபோல் மொராக்கோ, ஜப்பான் நாடுகளின் அரசர்கள், இஸ்ரேல், சூடான், உக்ரைன் நாடுகளின் அதிபர்கள், பாலஸ்தீனத்தின்தாற்காலிக அதிபர் எஸ்.எம்.கான், ஆஸ்திரேலிய கவர்னல் ஜெனரல் மைக்கேல் ஜெப்ரி, அல்ஜீரியா அதிபர் அப்தெலாஜிஸ்பெளடேலிகா மற்றும் சார்ஜா மன்னர் சுல்தான் பின் முகமது அல் குஷிமி ஆகியோரும் இரங்கல் செய்தி அனுப்பியுள்ளதாககுடியரசுத் தலைவர் மாளிகை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
-
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்













Click it and Unblock the Notifications