தமிழகம்: கூட்டம் கூட்டமாய் வெளியேறிய கடலோர பகுதி மக்கள்
சென்னை:
![]() |
இந்தோனேஷியாவில் பூகம்பம் நிகழ்ந்த அடுத்த அரை மணி நேரத்தில், சுனாமி எச்சரிக்கையை உள்துறை அமைச்சகத்திடம்கடலாய்ச்சித்துறை அமைச்சகம் தெரிவித்தது.
இதையடுத்து பிரதமர் மன்மோகன் சிங்குடன் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் அவசர ஆலோசனை நடத்தினார்.இதையடுத்து அவசரகால நிலைமைக்கான குழுவின் கூட்டம் கூடியது.
உடனே கடலோர மாநில அரசுகளுக்கு சுனாமி எச்சரிக்கை அனுப்பப்பட்டது. கடலோரங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பானஇடங்களுக்கு அப்புறப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து இந்தப் பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். சென்னையில் மெரீனா பீச்சில் தூங்கிக் கொண்டிருந்த சுமார் 3,000பேரை போலீசார் எழுப்பி அங்கிருந்து அகற்றினர்.
மேலும் மருத்துவமனைகள் மற்றும் மக்கள் தங்குவதற்கேற்ப சமூக மையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டன. சுமார் 1லட்சம் உணவுப் பொட்டலங்களை தயாரிக்கும் பணியில் வருவாய்த்துறையில் இறங்கினர்.
ஆனால், சுனாமியைப் பார்க்க நூற்றுக்கணக்கான மக்கள் கடற்கரையில் கூடி நின்றனர். அவர்களை அப்புறப்படுத்த போலீசார்மிகுந்த சிரமப்பட்டனர்.
இதே போல நாகப்பட்டிணம், கன்னியாகுமரி, கடலூர் மாவட்டங்களிலும் கடலோரத்தில் இருந்து அரை கிலோ மீட்டருக்கும்வசிப்பவர்களை போலீசார் வெளியேற்றினர்.
வேளாங்கண்ணியிலும் கடற்கரையோர மக்கள் வேறு பகுதிகளுக்கு மூட்டை முடிச்சுகளுடன் புறப்பட்டு சென்றனர்.வேளாங்கண்ணி கோவில் நிர்வாகிகளும் பாதுகாப்பான இடங்களுக்குக் கிளம்பிச் சென்றனர்.
நேற்று நாகப்பட்டினம் கலெக்டர் ராதாகிருஷ்ணன் சென்னை வந்தார். சுனாமி பற்றிய தகவல் கிடைத்தவுடன் அவசர அவசரமாகஅவர் நாகப்பட்டினத்துக்குத் திரும்பினார். சுனாமி தாக்குதல் ஏதும் இருந்தால் அதை எதிர்கொள்ள வசதியாக கடலோரமாவட்டங்களின் கலெக்டர் அலுவலகங்கள் நேற்று இரவிலும் செயல்பட்டன.
நள்ளிரவில் இந்தப் பணிகள் நடந்து கொண்டிருந்தபோதே சுனாமி அலைகள் ஏதும் உருவாகவில்லை என்ற தகவலும் கிடைத்தது.இதையடுத்து மக்கள் மீண்டும் கடற்கரைகளை நோக்கி திரும்பிச் சென்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications