ஏட்டு வீட்டுக்குச் சென்று பாராட்டிய டிஜிபி!
சென்னை:
சென்னை அம்பத்தூர் போக்குவரத்து தலைமைக் காவலர் முத்தையாவின் நேர்மையான பணி, மனிதாபிமானத்தைக்கேள்விப்பட்டு வியந்த தமிழக காவல் துறை தலைவர் (டிஜிபி) அலெக்சாண்டர், அவரது வீட்டுக்கே சென்று பாராட்டி, பரிசும்வழங்கினார்.
அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலையத்தில் போக்குவரத்துப் பிரிவுத் தலைமைக் காவலராக இருப்பவர் முத்தையா.இப்பகுதியில் போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் மிக கடமையுடன் ஈடுபட்டு அப்பகுதி மக்களின் நன்மதிப்பைப்பெற்றவர்.அதிக போக்குவரத்து உள்ள இந்த பகுதியில் மிகுந்த திறமையோடும், புத்தி சாதுர்யத்தோடும், அசாத்திய பொறுமையுடனும்முத்தையா செயல்படுவதால், அந்தப் பகுதி மக்கள் அனைவரின் அன்பையும் பெற்றவர் முத்தையா.
முத்தையா குறித்து பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகின. இதைப் பார்த்த டிஜிபி அலெக்சாண்டர் அவரை நேரில்சந்தித்துப் பாராட்ட முடிவு செய்தார். இதற்காக முத்தையாவை டிஜிபி அலுவலகத்திற்கு வரவழைக்காமல் நேராக அவரதுவீட்டிற்கே சென்று பாராட்டினால் என்ன என்று யோசித்த அவர், உடனடியாக அதை செயல்படுத்தினார்.
அலெக்சாண்டருடன், உளவுப் பிரிவு கண்காணிப்பாளர் சிவனாண்டி மற்றும் அதிகாரிகளும் சென்றனர். வழியில் அம்பத்தூர்காவல் நிலையத்திலும், எஸ்டேட் காவல் நிலையத்திலும், ஆட்டோ நிறுத்தங்களிலும் முத்தையா குறித்து அலெக்சாண்டர்விசாரித்தார்.
அனைவருமே சொல்லி வைத்தது போல முத்தையாவைப் புகழ்ந்து தள்ளினர். இதனால் சந்தோஷமடைந்த அலெக்சாண்டர்காரை நேராக முத்தையா வீட்டுக்கு விட்டார். காரிலிருந்து டிஜிபியும், உயர் அதிகாரிகளும் இறங்கியதைப் பார்த்தமுத்தையாவுக்கு ஒன்றும் புரியவில்லை.
பதட்டத்துடன் அவர்களை உள்ளே அழைத்துச் சென்றார். முத்தையாவின் மனைவிக்கும் சந்தோஷமும், இன்ப அதிர்ச்சியுமாகஇருந்தது. அவர்களை அமர வைத்த அலெக்சாண்டர் முத்தையாவின் பணிகள் குறித்துப் பாராட்டினார். அத்தோடு அவரதுகுடும்பம் குறித்தும் விசாரித்தார்.
அப்போது முத்தையாவின் மனைவி, தனது கணவருக்கு நரம்பியல் பிரச்சினை இருப்பதாக டிஜிபியிடம் தெரிவித்தார்.இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் அரசு செலவில் சிறப்பான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.
பின்னர் முத்தையாவின் பணிகளைப் பாராட்டி அவருக்கு ரூ. 1000 அன்பளிப்பாக கொடுத்தார். அதன் பின்னர் அங்கிருந்துசென்றார். டிஜிபியே வந்து தன்னைப் பாராட்டிச் சென்றது குறித்து முத்தையா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
டிஜிபி என்பவர் காவலர்களுக்கு தலைவர் மட்டுமல்ல, அவர்களது குடும்பங்களுக்கும் குடும்பத் தலைவர் போல. நேர்மையாகபணியாற்றினால் நிச்சயம் நம்மைத் தேடி பெருமை வந்து சேரும். நான் எனது கடமையைத் தான் செய்தேன். அதற்கு இன்றுபாராட்டு கிடைத்துள்ளது. இதை வாழ்நாளில் மறக்க மாட்டேன் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications