பிரபாகரன் கெடு: நார்வே குழு இந்தியா வருகை
கொழும்பு:
தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற இலங்கை அரசு உடனே முன் வராவிட்டால் டிசம்பர் 31க்குப் பின்தங்களது போராட்டம் தீவிரமடையும் என விடுதலைப் புலிகள் எச்சரித்துள்ளதையடுத்து அதிபர் ராஜபக்ஷே அவசரஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளார்.
மாவீரர் தினத்தையொட்டி உரையாற்றிய பிரபாகரன், அரசுக்கு கெடு விதித்தாலும் ராஜபக்ஷேவின் பேச்சுவார்த்தைக்கானஅழைப்பை நிராகரிக்கவில்லை. இதனை பொன்னான வாய்ப்பாக இலங்கை அரசு கருதுகிறது.இதையடுத்து அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்குவது குறித்து மூத்த அமைச்சர்கள் மற்றும் தனது கட்சியின் மூத்ததலைவர்களுடன் ராஜபக்ஷே ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதே நேரத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட மிக முக்கிய காரணமாக இருந்த நார்வேயை ராஜபக்ஷே தொடர்ந்து புறக்கணித்துவருகிறார். அந் நாட்டு அமைதிக் குழுவின் உதவிகள் குறித்து தனது அறிக்கைகள், பேட்டிகள், உரைகளில் இருட்டடிப்பு செய்துவருகிறார்.
இதனால் இலங்கை விவகாரத்தில் நார்வே தொடர்ந்து தலையிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
இதற்கிடையே இந்த வாரம் எரிக் சோல்ஹைம் தலைமையில் இலங்கை வரவிருந்த நார்வே தூதுக் குழு அந்தப் பயணத்தை ஒத்திவைத்துவிட்டது. அந்தக் குழுவினர் இந்தியாவுக்கு வந்து வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் பேச்சு நடத்தவுள்ளனர்.
இந் நிலையில், ராஜபக்ஷேவின் பேச்சுவார்த்தை அழைப்பை விடுதலைப் புலிகள் ஏற்க வேண்டும் என அமெரிக்கா கூறியுள்ளது.அந் நாட்டு வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
விடுதலைப் புலிகள் தீவிரவாதத்தையும் வன்முறையையும் கைவிட வேண்டும். சிறுவர்களை படையில் சேர்ப்பதை நிறுத்தவேண்டும். பிரபாகரனின் பேச்சைப் பார்த்தால் அவர் இதுவரை எந்த நோக்கத்தை முன் வைத்துப் போராடினாரே அதையே அவர்தொடர்ந்து செய்திடும் முடிவில் இருப்பது புரிகிறது.
இந்த விஷயத்தில் நார்வேயின் மத்தியஸ்தத்தை அமெரிக்கா தொடர்ந்து ஊக்குவிக்கும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications