27% இட ஒதுக்கீட்டை காக்க மத்திய அரசு முழு முயற்சி-அர்ஜூன் சிங்
டெல்லி:பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண அனைத்து சட்டவிழிகளையும் மத்திய அரசு பரிசீலிக்கிறது என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜூன் சிங் கூறியுள்ளார்.
அனைத்து மாநில கல்வி அமைச்சர்களின் 2 நாள் மாநாடு டெல்லியில் தொடங்கியது. மாநாட்டை தொடங்கி வைத்து அர்ஜூன் சிங் பேசுகையில்,
மத்திய அரசின் உயர்கல்வி நிலையங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறுத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் தனது இடைக்கால உத்தரவில் தெரிவித்துள்ளது.
இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண அனைத்து சட்டவழிகளையும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் சமூகரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் பின் தங்கிய பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்க கடந்த ஆண்டு அரசியல் சட்டத்தின் 15வது பிரிவில் திருத்தம் செய்யப்பட்டது. இதற்காக மாநில அரசுகள் சட்டம் இயற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தோம்.
ஆனால் தமிழகம், ஆந்திரா, கார்நாடகம், உத்தரபிரதேசம், மராட்டியம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 6 மாநிலங்கள் தான் இதற்கான சட்டத்தை நிறைவேற்றி உள்ளன. மற்ற மாநிலங்களிடம் இருந்து பதிலை எதிர்பார்க்கிறோம்.
11வது ஜந்தாண்டு திட்டத்தில் மதிய உணவு திட்டம் உயர் தொடக்க கல்விக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. உயர் கல்விக்கான மத்திய திட்ட ஒதுக்கீடு அதிகாரிக்கப்பட்டுள்ளது.
விரைவில் திருவனந்தபுரம் மற்றும் போபால் நகரங்களில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகங்கள் (ஐஐஎஸ்இஆர்) நிறுவப்படும்.
தமிழ்நாட்டில் காஞ்சீபுரத்தில் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொடர்பான ஐஐடி கல்வி நிறுவனம் அமைக்கப்படும். இதுதவிர வரைவு மற்றும் கட்டிடக்கலை படிப்புக்காக விஜயவாடாவிலும் போபாலிலும் 2 புதிய பள்ளிகள் திறக்கப்படும்.
நாடு முழுவதும் மேலும் 20 புதிய ஐஐடி கல்வி நிறுவனங்களை அமைக்கும் திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. இதில் தற்போது ஐஐடி இல்லாத மாநிலங்களுக்கு முன்னுரிமை தரப்படும்.
சிறுபான்மையினரின் கல்வி அறிவை ஊக்குவிப்பது தொடர்பாக பாத்மி கமிட்டி கூறியுள்ள பரிந்துரைகளையும் பரிசீலத்து வருகிறோம் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications