அஜ்மீர் எதிரொலி: தமிழக கோவில்கள், தர்ஹா, மசூதிகளுக்கு தீவிர பாதுகாப்பு
மதுரை:
ஆஜ்மீர் தர்ஹாவில் நடந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து தமிழகத்தில் முக்கிய வழிபாட்டு தலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ரம்ஜான், தசரா, தீபாவளி பண்டிகை நாட்களில் வழிபாட்டுத் தலங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத்துறை அனைத்து மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்தது.
இந் நிலையில் நேற்று பலத்த பாதுகாப்பையும் மீறி ஆஜ்மீர் தர்ஹாவில் டிபன் பாக்ஸ் குண்டு வெடித்ததால் 3 பேர் கொல்லப்பட்டனர். 20க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து நாடு முழுவதும் முக்கிய வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு பல மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முக்கிய கோவில்கள், மசூதிகள், தர்ஹாக்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டப்படுவதையொட்டி மசூதிகளில் சிறப்பு தொழுகை நடக்க இருப்பதால் மசூதிகள் அருகே சந்தேகப்படும் வகையில் யார் நடமாடினாலும் உடனடியாக போலீசார் தகவல் தருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஜ்மீர் குண்டுவெடிப்பை தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில், பழனி தண்டாயுதபாணி முருகன் கோவில் மற்றும் ராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோவில் ஆகியவற்றில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பக்தர்களின் நடவடிக்கைகள் வீடியோ கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வெடிகுண்டு நிபுணர்கள் அடிக்கடி சோதனை செய்து வருகின்றனர். கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனையிடப்படுகின்றனர்.
மீனாட்சி அம்மன் கோவிலில், வெடிகுண்டை செயலிழக்க வைக்கும் நிபுணர்கள் முகாமிட்டு சோதனை நடத்தி வருகின்றனர். கோவிலுக்குள் செல்போன்களுடன் வரும் பக்தர்களை தடுக்க முடியாது என்பதால், செல்போன்களை செயலிழக்க வைக்கும் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் செல்போன் மூலம் குண்டு வெடிப்புகள் நடத்துவதை தடுக்க முடியும்.
எப்போதும் இல்லாத அளவு மீனாட்சி அம்மன் கோவிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது அங்கு பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
குமரி மாவட்டத்தில்...:
குமரி மாவட்டத்தில் மசூதிகள், இந்து ஆலயங்களில் நேற்று இரவு முதல் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு வந்த அனைத்து ரயில்களிலும் போலீசார் சோதனை நடத்தினர்.
இடலாக்குடி, இளங்கடை, திட்டுவிளை, மாதவலாயம், பெருவிளை, வடசேரி, மேட்டுக்கடை, தக்கலை, அழகிய மண்டபம், மார்த்தாண்டம் உள்பட 32 இடங்களில் உள்ள மசூதிகள், தர்கா ஆலயங்களில் போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.
நேற்று இரவு முதல் தீவிர வாகன சோதனையும் நடந்து வருகிறது. சோதனை சாவடியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications