திருவாரூரில் அதிமுகவினர் மீது பொய் வழக்கு-ஜெ கண்டனம்

இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முன் விரோதம் காரணமாக திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூடி கலைச்செல்வன் கடந்த 17ம் தேதி நாட்டு வெடிகுண்டு வீசி, அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.
அைதத் தொடர்ந்து நான்கு அரசு பேருந்துகளும், மினி லாரி ஒன்றும் தீ வைக்கப்பட்டதுடன் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன.
அதிமுகவைச் சேர்ந்த கொரடாச்சேரி பேரூராட்சிக் கழகச் செயலாளரும், பேரூராட்சி மன்ற துணைத் தலைவருமான கோவிந்தராஜ், திருவாரூர் மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு தலைவர் கவ்தியா ஆகியோரது வீடுகளும், கொரடாச்சேரி பேரூராட்சிக் கழக துணைச் செயலாளர் வின்சென்ட் காளிதாஸ் உள்ளிட்டவர்களின் கடைகளும் காவல் துறையினரின் முன்னிலையில் திமுகவினரால் சூறையாடப்பட்டிருக்கின்றன.
கொரடாச்சேரி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொடுத்தவனிதம், காவலாக்குடி, குளிக்கரை உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறையினரின் துணையுடன் வன்முறையை நிகழ்த்தியிருக்கிறார்கள். இதன் உச்சகட்டமாக, சிறிதும் மனிதாபிமானமற்ற முறையில் பொக்லைன் இயந்திரம் கொண்டு ஏழை-எளியோரின் வீடுகள் (அதிமுகவினரின் வீடுகள்) தகர்க்கின்ற கொடூர நிகழ்ச்சிகளும் நடந்தேறியிருக்கின்றன.
இவற்றுடன் மட்டுமல்லாமல் சம்பவம் நடந்த 17ம் தேதி அன்றைய தினம் மாணவ-மாணவியர்கள் தேர்வுக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டிருப்பது மிகுந்த வேதனை அளிக்கக் கூடிய செய்தியாகும்.
திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் கொல்லப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள், சட்டம்-ஒழுங்கு சீரழிந்து கிடப்பதற்குச் சான்றாக விளங்குகின்றன. இதை நான் பலமுறை ஆதாரத்துடன் நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்கிறேன்.
இது சம்பந்தமாக பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுக்கின்றபோது காவல்துறையினர் அவர்கள் கொடுக்கும் புகார்களை வாங்க மறுக்கின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் பேருந்துகளை இயக்கவிடாமலும், கடைகளை முற்றிலுமாக அடைத்தும் திமுகவினர் அராஜக செயல்களில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியுடன் பாதிக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு வெட்கக் கேடான வேதனையளிக்கக் கூடிய செயலாகும்.
இந்த மாவட்டத்தில் இயல்பு நிலை மீண்டும் திரும்புவதற்கு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதிமுக பொறுப்பாளர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் மீது தொடர்ந்து தாக்குதல் தொடுப்பதையும், காவல்துறையினரை வைத்து அவர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்வதையும் விட்டு விட்டு, திருவாரூர் மாவட்டத்தில் இயல்பு நிலை மீண்டும் திரும்புவதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications