Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தென்மாவட்ட தொழில் முதலீடுகளுக்கு அரசு வரிச் சலுகை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென் மாவட்டங்களில் ரூ. 50 கோடிக்கும் மேல் முதலீடு செய்தால் வரிச்சலுகை அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சட்டசபையில் தொழில்துறை- தகவல்தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு:

தமிழகத்தில் ரூ.250 கோடிக்கு மேல் முதலீடுகள் செய்யும் உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு வரிச்சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தென் மாவட்டங்களில் ரூ.50 கோடிக்கும் மேலாக முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு பல்வேறு வரிச்சலுகைகள் அளிக்கப்பட உள்ளன.

ரூ.50 கோடிக்கு மேல் ரூ.100 கோடி வரை முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு, அவர்கள் மூன்று ஆண்டுகளில் செலுத்த வேண்டிய மதிப்புக்கூட்டு வரியை, ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பச் செலுத்தும் வகையில் 0.1 சதவீதம் வட்டி வீதத்தில் கடனாக வழங்கப்படும்.

ரூ.100 கோடிக்கு மேல் ரூ.200 கோடி வரை முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு அவர்கள் நான்கு ஆண்டுகள் செலுத்த வேண்டிய வாட் வரியை ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பச் செலுத்தும்வகையில் 0.1 சதவீத வட்டியில் கடனாக வழங்கப்படும்.

ரூ.200 கோடிக்கு மேல் ரூ. 250 கோடி வரை முதலீடு செய்யும் நிறுவனங்கள் ஐந்து ஆண்டு வாட் வரியை ஏழு ஆண்டுகள் கழித்து திரும்பச் செலுத்தும்வகையில் 0.1 சதவீத வட்டியில் கடனாக வழங்கப்படும்.

தற்போது ரூ.250 கோடி முதல் ரூ.1,500 கோடி வரையிலான முதலீடுகளு்ககு வரிச்சலுகைகள் கடனாக வழங்கப்படுகின்றன. தென்மாவட்டங்களுக்குச் சிறப்புச் சலுகையாக அது மானியமாக வழங்கப்படும்.

ஒற்றைச்சாளர முறை:

தொழில் தொடங்குவதற்கு அரசின் பல்வேறு துறைகளிடமிருந்து 10க்கும் மேற்பட்ட அனுமதிகளும், தடையில்லா சான்றுகளும் பெறவேண்டியிருப்பதால் காலதாமதம் ஏற்படுகிறது.
இதை எளிமைப்படுத்தி பல்வேறு துறைகளை ஒருங்கிணைக்கவும், அதன்மூலம் ஒற்றைசாளர முறையில் திட்டங்களுக்கு அனுமதிகளையும் ஒரே இடத்தில் வழங்கவும் சிறப்புச் சட்டம் விரைவில் கொண்டு வரப்படும்.

ஜப்பான், கொரியா, பின்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருந்து இன்னும் அதிக அளவில் முதலீடுகளை ஈர்க்க ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியே சிறப்புத் தொழிற் பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளன.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அரசின் இந்த அறி்க்கையால் பொருளாதார மற்றும் தொழில்துறையில் பின்தங்கியுள்ள தென் மாவட்டங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+