துபாய் ஜூமைரா சிட்டி-சிக்கலில் 1 லட்சம் பேர்

துபாயின் சட்வா பகுதியில் 1 லட்சத்திற்கு மேற்பட்ட வெளிநாட்டவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் ஆவர். இப்பகுதியில் மிகப் பெரிய அளவிலான ஜூமைரா கார்டன் சிட்டி உருவாக்கப்படவுள்ளது.
இதற்காக இப்பகுதியில் உள்ள பெரும்பாலான வீடுகள், கட்டடடங்ளை இடிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கு வசித்து வரும் வெளிநாட்டினர் அப்புறப்படுத்தப்படவுள்ளனர். இதனால் இவர்கள் தங்களது வீடுகள் உள்ளிட்டவற்றை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஷேக் சயீத் சாலை முதல் அல் வாசி சாலை வரை பல கிலோமீட்டர் தொலைக்கு ஜூமைரா கார்டன் சிட்டி உருவாக்கப்படவுள்ளது. டியாபா தெரு முதல் புகழ் பெற்ற, துபாயின் பழமையான பகுதியான சபா பார்க் வரையிலும் இந்த நகரின் எல்லை பரந்து விரிந்திருக்கும்.
இந்த இடைப்பட்ட பகுதியில் உள்ள அனைத்து கட்டடங்களையும் இடிக்கப் போகிறார்கள். சத்வா பகுதி துபாயிலேயே மிகவும் விலை குறைவான பகுதியாகும். இங்கு குறைந்த வாடகைக்கு வீடு கிடைக்கும், பொருட்களின் விலையும் சற்று மலிவாக இருக்கும். மத்திய துபாயில் இந்தப் பகுதி உள்ளது.
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் இப்பகுதியில்,தான் பெரிய அளவில் வசித்து வருகின்றனர். குடும்பத்துடன் தங்கியிருப்பவர்களுக்கும், கல்யாணமாகாத பேச்சலர்களுக்கும் இந்தப் பகுதி சொர்க்க பூமி போல.
துபாயிலேயே இப்பகுதி மட்டுமே சற்று மலிவான பகுதி. மற்றவை எல்லாம் படு காஸ்ட்லியான ஏரியாக்கள். எனவேதான் இந்தப் பகுதியில் வெளிநாட்டினர் குறிப்பாக இந்தியர்கள் அதிகம் வசிக்கின்றனர்.
ஆனால் இந்த பகுதியை தற்போது ஜூமைரா கார்டன் சிட்டிக்காக கையகப்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதனால் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இப்பகுதியில் உள்ள நில உரிமையாளர்களுக்கும், வீட்டு உரிமையாளர்களுக்கும் மார்க்கெட் விலையை விட 2 மடங்கு விலை தருவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளதால், அவர்களும் விற்பதற்கு சம்மதம் தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர். இதனால் வெளிநாட்டவர்கள் இங்கிருந்து அப்புறப்படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications