துபாய் ஜூமைரா சிட்டி-சிக்கலில் 1 லட்சம் பேர்

துபாயின் சட்வா பகுதியில் 1 லட்சத்திற்கு மேற்பட்ட வெளிநாட்டவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் ஆவர். இப்பகுதியில் மிகப் பெரிய அளவிலான ஜூமைரா கார்டன் சிட்டி உருவாக்கப்படவுள்ளது.
இதற்காக இப்பகுதியில் உள்ள பெரும்பாலான வீடுகள், கட்டடடங்ளை இடிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கு வசித்து வரும் வெளிநாட்டினர் அப்புறப்படுத்தப்படவுள்ளனர். இதனால் இவர்கள் தங்களது வீடுகள் உள்ளிட்டவற்றை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஷேக் சயீத் சாலை முதல் அல் வாசி சாலை வரை பல கிலோமீட்டர் தொலைக்கு ஜூமைரா கார்டன் சிட்டி உருவாக்கப்படவுள்ளது. டியாபா தெரு முதல் புகழ் பெற்ற, துபாயின் பழமையான பகுதியான சபா பார்க் வரையிலும் இந்த நகரின் எல்லை பரந்து விரிந்திருக்கும்.
இந்த இடைப்பட்ட பகுதியில் உள்ள அனைத்து கட்டடங்களையும் இடிக்கப் போகிறார்கள். சத்வா பகுதி துபாயிலேயே மிகவும் விலை குறைவான பகுதியாகும். இங்கு குறைந்த வாடகைக்கு வீடு கிடைக்கும், பொருட்களின் விலையும் சற்று மலிவாக இருக்கும். மத்திய துபாயில் இந்தப் பகுதி உள்ளது.
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் இப்பகுதியில்,தான் பெரிய அளவில் வசித்து வருகின்றனர். குடும்பத்துடன் தங்கியிருப்பவர்களுக்கும், கல்யாணமாகாத பேச்சலர்களுக்கும் இந்தப் பகுதி சொர்க்க பூமி போல.
துபாயிலேயே இப்பகுதி மட்டுமே சற்று மலிவான பகுதி. மற்றவை எல்லாம் படு காஸ்ட்லியான ஏரியாக்கள். எனவேதான் இந்தப் பகுதியில் வெளிநாட்டினர் குறிப்பாக இந்தியர்கள் அதிகம் வசிக்கின்றனர்.
ஆனால் இந்த பகுதியை தற்போது ஜூமைரா கார்டன் சிட்டிக்காக கையகப்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதனால் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இப்பகுதியில் உள்ள நில உரிமையாளர்களுக்கும், வீட்டு உரிமையாளர்களுக்கும் மார்க்கெட் விலையை விட 2 மடங்கு விலை தருவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளதால், அவர்களும் விற்பதற்கு சம்மதம் தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர். இதனால் வெளிநாட்டவர்கள் இங்கிருந்து அப்புறப்படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.
-
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன












Click it and Unblock the Notifications