ஊழியர்களுக்கு சம்பளமில்லை; பெரும் சிக்கலில் சுபிக்ஷா!

இந்த நிறுவனப் பணியாளர்களுக்கு கடந்த இரு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்றும், மேற்கொண்டு நிறுவனத்தை நடத்த குறைந்தது ரூ.300 கோடி தேவை என்றும் சுபிக்ஷா தரப்பில் அதன் நிறுவனர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2008-ன் இரண்டாவது காலாண்டில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக ஏற்பட்ட பாதிப்பிலிருந்து நிறுவனத்தால் மீள முடியவில்லை என்றும், இதுவே இப்போது கழுத்தை நெறிக்கும் அளவு வளர்ந்து கம்பெனியை மூழ்கடித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
சுபிக்ஷாவுக்கு இப்போது ரூ. 700 கேடிக்கும் மேல் கடன் உள்ளதாம். எந்த வங்கியும் கடன் தர முன்வராத நிலையில், இதன் பல கிளைகளுக்கும் பொருட்களைக் கூட வாங்க முடியவில்லையாம். இதனால் பல கிளைகளில் வெற்று அலமாரிகளே காட்சி தருகின்றன.
நிறுவனத்தின் ஊழியர்களுக்கு சம்பளமாக மட்டும் ரூ.20 கோடி தரவேண்டியுள்ளதாம். சுபிக்ஷாவுக்கு பொருட்களை சப்ளை செய்தவர்களுக்கு மட்டுமே ரூ.45 கோடி தரவேண்டுமாம். இதையெல்லாம் சரிசெய்யத்தான் ரூ.300 கோடி தேவைப்படுகிறதாம்.
'எப்படியும் இந்தத் தொகையைப் புரட்டிவிடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. கூடிய சீக்கிரம் மீண்டும் பழையபடி வருவோம்', என்கிறார் சுப்பிரமணியன். பல நிதி நிறுவனங்களிடம் கடன் பெறும் முயற்சியில் உள்ளாராம் சுப்பிரமணியன்.
'வங்கிகள் இந்த நேரத்தில் உதவ முன்வர வேண்டும். சுபிக்ஷாவை ஒழித்துவிட வேண்டும் என கடன் தருபவர்களும், வங்கிகளும் நினைத்துவிட்டால் நாங்கள் என்ன செய்ய முடியும். ஆனால் சுபிக்ஷா என்பது பொன் முட்டையிடும் ஒரு வாத்து. இதற்கு உயிர் தர வேண்டிய தருணம் இது. இந்த ஆண்டு நாங்கள் எதிர்பார்க்கும் ரூ.300 கோடியும் கிடைத்துவிட்டால், ரூ.4,300 கோடி வர்த்தகத்தை எதிர்பார்க்கலாம்', என்கிறார் சுப்பிரமணியன்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications