நாளை மீண்டும் 3வது அணி உதயம்-அதிமுகவும்..

இந்திய அரசியலில் எப்போதுமே பெரிய ஜோக் இந்த மூன்றாவது அணி. கொள்கைரீதியி்ல் எந்தவிதமாக ஒற்றுமையே இல்லாத உதிரிப் பூக்களான கட்சிகள் இணைந்து அவ்வப்போது உருவாக்கும் கதம்ப மாலை தான் மூன்றாவது அணி.
இந்த அணியில் இன்று காலை சேர்பவர் மாலையில் அந்த அணியில் இருப்பாரா என்பது நிச்சயமில்லை. இந்த அணியில் அதிக முறை இணைந்து, அணியை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஓடி வந்தது யார் என்று ஒரு போட்டி வைத்தால் அதிமுகவுக்கே தங்கப் பதக்கம் கிடைக்கும்.
அந்த அளவுக்கு இவரை நம்பி இந்த அணி பலமுறை கலகலத்துப் போயிருக்கிறது. முதலில் முலாயம் சிங் முயற்சியில் இந்த அணி உருவானது. அதில் அதிமுக இணைந்தது. ஆனால், திடீரென மாயமானது.
அடுத்ததாக சந்திரபாபு நாயுடு முயற்சியில் இந்த அணி உருவானது. அதிலும் அதிமுக இருந்தது. ஆனால், மாயாவதி தான் தலைவர் என்ற அறிவிப்பு வந்ததாலும், தன்னைத் தலைவியாக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படாததாலும் அதை விட்டு விலகினார் ஜெயலலிதா.
இந் நிலையில் பெங்களூர் அருகே நடக்கும் நிகழ்ச்சியில் நாளை மீண்டும் இந்த அணி அதிகாரப்பூர்வமாக உருவாகவுள்ளது. இதில் முக்கியமான அம்சம். இந்த அணியில் அதிமுகவும் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது தான்.
முன்னாள் பிரதமரும் மீண்டும் பிரதமராகும் கனவுடன் பல காலமாக யாகங்கள் நடத்திக் கொண்டிருப்பருமான மதசார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவே கெளடா தான் இந்த முறை இந்த அணியை உருவாக்குவதில் அதிக முனைப்பு காட்டியுள்ளார்.
எப்போதுமே கெளடா, அவரது மகனும் முன்னாள் முதல்வருமான குமாரசாமிக்கு அரசியல்ரீதியில் நெருக்கமாக இருப்பவர் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.
கெளடா உருவாக்கும் இந்த மூன்றாவது அணியில் மதசார்பற்ற ஜனதா தளம் தவிர, தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பிஜு ஜனதா தளம் ஆகியவை இணையும் என்று கெளடாவே கூறியுள்ளார்.
நாளை நடக்கும் இதன் துவக்க விழாவில் இடதுசாரி கட்சித் தலைவர்களான பிரகாஷ் காரத், ஏ.பி.பரதன், சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர ராவ், அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்கிறார்களாம்.
இது குறித்து நிருபர்கிடம் பேசிய கெளடாவிடம், மீண்டும் பிரதமராகும் திட்டத்துடன் தான் இந்த அணியை உருவாக்குகிறீர்களா என்று கேட்டதற்கு, அப்படியெல்லாம் இல்லை. அணியில் இடம் பெற்றுள்ள எந்த கட்சியின் தலைவரும் பிரதமராக வரலாம் என்றார்.
-
பாஜக சிம்ப்ளி வேஸ்ட்.. திருமாவளவன் பெஸ்ட்.. புயலை கிளப்பிய வால்பாறை அதிமுக வேட்பாளர் ஆடியோ -
எடப்பாடி முதல்வராக கூடாது.. ஓ.எஸ்.மணியன் டார்கெட் அதுதான்.. அதிமுக நிர்வாகியின் பகீர் குற்றச்சாட்டு! -
75 வருட வரலாற்றில் முதன்முறை..DSV vs IPS! திண்டுக்கல்லில் நேருக்குநேர் மோதும் திமுக-அதிமுக மா.செ.கள் -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
Jayalalithaa: ஜெயலலிதா வீடு பறிமுதல்.. ரூ.1.60 கோடி சொத்து வரி பாக்கியால் ஐதராபாத் மாநகராட்சி நடவடிக்கை -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
அண்ணாமலை + கேடி ராகவனுக்காக.. அதிமுகவிடம் 5 தொகுதிகளை மாற்றி கேட்ட பாஜக.. யோசிக்கும் எடப்பாடி -
31 தொகுதிகளில் 33 ஆயிரம் ஓட்டுகளை வாங்கியவர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி! எடப்பாடி பழனிசாமி அட்டாக் -
கொளத்தூரில் ஸ்டாலினை எதிர்த்து போட்டி.. யார் இந்த சந்தான கிருஷ்ணன்? வடசென்னை ரிசல்ட் தெரியுமா? -
அதிமுகவுக்கு ஆதரவு.. பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்க்கு நீலம் பண்பாட்டு மையம் சப்போர்ட்! பா.ரஞ்சித் அறிவிப்பு












Click it and Unblock the Notifications