மாமனார் வீட்டில் இளம்பெண் எரி்த்துக் கொலை?

Subscribe to Oneindia Tamil

கடையநல்லூர்: கடையநல்லூரில் மாமனார் வீட்டில் குழந்தையுடன் வசித்து வந்த இளம் பெண் மர்மமான முறையில் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடையநல்லூர் கரியாமணிக்கப் பெருமாள் கீழஅக்ஹாரத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மகன் சுப்பிரமணியன். இவர் சென்னையில் வீடியோ போட்டோகிரபராக உள்ளார். இவரது மனைவி பிருந்தா. இவர்களுக்கு கலாவதி என்ற கைகுழந்தை உள்ளது. அந்த குழந்தையுடன் பிருந்தா மாமனார் வெங்கடாசலம் வீட்டில் வசித்து வந்தார்.

இன்று காலை 7 மணியளவில் வீட்டின் பின்புறம் இருந்து பிணவாடை வீசவே அந்த வழியாக சென்றவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது இளம்பெண் ஒருவர் உடல் முழுவதும் கருகிய நிலையில் இறந்து கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் கடையநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் பிருந்தாவின் மாமனார், மாமியாரிடம் விசாரணை நடத்தது. அப்போது பிருந்தா வீட்டில் இல்லாததும், குழந்தை மட்டும் இருந்ததும் தெரியவந்தது. இதனால் எரிந்த நிலையில் இறந்து கிடப்பது பிருந்தாதான் என்பது தெரியவந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது தெரியவில்லை.

தினமும் அதிகாலையில் பிருந்தா வாக்கிங் செல்வது வழக்கம். இதையறிந்த மர்ம நபர் அவரை பின்தொடர்ந்து வந்து பலாத்காரம் செய்ய முயன்றிருக்கலாம் என்றும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பிருந்தாவை அவர் கொன்று எரித்திருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது. குடும்ப தகராறில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+