இலங்கை தாக்குதல்-ரெட்கிராஸ் ஊழியர், 100 பேர் பலி
கொழும்பு: இலங்கையில் பாதுகாப்பு பகுதியில் ராணுவத்தினர் குண்டுவீச்சு நடத்தியதில் சர்வதேச செஞ்சிலுவை சங்க ஊழியரும், அவரது தாயாரும் பலியானார்கள்.
இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. ராணுவத்தின் தாக்குதலில் தினமும் நூற்றுக்கணக்கான அப்பாவி தமிழர்கள் பலியாகி வருகின்றனர். அதே சமயத்தில் ராணுவம் போர் பகுதியில் மட்டுமல்ல பாதுகாப்பு பகுதியில் இருக்கும் மருத்துவமனைகளில் கூட குண்டுவீசி வருகிறது.
இலங்கை ராணுவத்தின் தாக்குதல் உக்கிரம் அடைந்து வரும் நிலையில் தமிழர்களுக்கு நிவாரணப் பணி வழங்குவதில் செஞ்சிலுவை இயக்கம் ஈடுபட்டு வருகிறது.
100 தமிழர்கள் பலி...
இந்நிலையில் நேற்றுமுன்தினம் முல்லிவாய்க்கால் பகுதியில் இருந்த மருத்துவமனை ஒன்றில் இலங்கை ராணுவம் கடுமையான தாக்குதலை நடத்தியது. இதில் மனநலம் பாதிக்கப்பட்ட 38 பெண்கள் உட்பட 65 பேர் பலியானார்கள்.
அருகிலிருக்கும் பகுதிகளில் நடந்த தாக்குதலில் மேலும் 35 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதையடுத்து மொத்தம் பலியானவர்களி்ன் எண்ணிக்கை 100யை தாண்டியுள்ளது.
இதில் செஞ்சிலுவை சங்க ஊழியர் ஒருவரும், அவரது தாயாரும் பலியாகி இருப்பதாக தெரிகிறது. இவர்களை தவிர்த்து அந்த மருத்துவமனையின் டாக்டர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
இது குறித்து இலங்கை செஞ்சிலுவை சங்க செய்தி தொடர்பாளர் சரசி விஜயரத்னே கூறுகையில், நேற்று மதியம் நடந்த குண்டுவீச்சுக்கு செஞ்சிலுவை சங்க ஊழியர் ஒருவரும், அவரது தாயாரும் பலியாகி உள்ளனர். அந்த ஊழியருக்கு வயது 31 இருக்கும் என்றார்.
இந்நிலையில் இலங்கை ராணுவம் நேற்றும் அதே மருத்துவமனை மீது மீண்டும் ஒரு கொடூர தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் பலியானவர்களின் எண்ணிக்கை தெரியவில்லை.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு












Click it and Unblock the Notifications