இலங்கை தாக்குதல்-ரெட்கிராஸ் ஊழியர், 100 பேர் பலி
கொழும்பு: இலங்கையில் பாதுகாப்பு பகுதியில் ராணுவத்தினர் குண்டுவீச்சு நடத்தியதில் சர்வதேச செஞ்சிலுவை சங்க ஊழியரும், அவரது தாயாரும் பலியானார்கள்.
இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. ராணுவத்தின் தாக்குதலில் தினமும் நூற்றுக்கணக்கான அப்பாவி தமிழர்கள் பலியாகி வருகின்றனர். அதே சமயத்தில் ராணுவம் போர் பகுதியில் மட்டுமல்ல பாதுகாப்பு பகுதியில் இருக்கும் மருத்துவமனைகளில் கூட குண்டுவீசி வருகிறது.
இலங்கை ராணுவத்தின் தாக்குதல் உக்கிரம் அடைந்து வரும் நிலையில் தமிழர்களுக்கு நிவாரணப் பணி வழங்குவதில் செஞ்சிலுவை இயக்கம் ஈடுபட்டு வருகிறது.
100 தமிழர்கள் பலி...
இந்நிலையில் நேற்றுமுன்தினம் முல்லிவாய்க்கால் பகுதியில் இருந்த மருத்துவமனை ஒன்றில் இலங்கை ராணுவம் கடுமையான தாக்குதலை நடத்தியது. இதில் மனநலம் பாதிக்கப்பட்ட 38 பெண்கள் உட்பட 65 பேர் பலியானார்கள்.
அருகிலிருக்கும் பகுதிகளில் நடந்த தாக்குதலில் மேலும் 35 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதையடுத்து மொத்தம் பலியானவர்களி்ன் எண்ணிக்கை 100யை தாண்டியுள்ளது.
இதில் செஞ்சிலுவை சங்க ஊழியர் ஒருவரும், அவரது தாயாரும் பலியாகி இருப்பதாக தெரிகிறது. இவர்களை தவிர்த்து அந்த மருத்துவமனையின் டாக்டர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
இது குறித்து இலங்கை செஞ்சிலுவை சங்க செய்தி தொடர்பாளர் சரசி விஜயரத்னே கூறுகையில், நேற்று மதியம் நடந்த குண்டுவீச்சுக்கு செஞ்சிலுவை சங்க ஊழியர் ஒருவரும், அவரது தாயாரும் பலியாகி உள்ளனர். அந்த ஊழியருக்கு வயது 31 இருக்கும் என்றார்.
இந்நிலையில் இலங்கை ராணுவம் நேற்றும் அதே மருத்துவமனை மீது மீண்டும் ஒரு கொடூர தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் பலியானவர்களின் எண்ணிக்கை தெரியவில்லை.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications