பிள்ளையை போட்டு விட்டு தாய் எஸ்கேப்
தூத்துக்குடி: தூத்துக்குடி தூத்துக்குடியில், பெண் ஒருவர் தனக்குப் பிறந்த குழந்தையை மருத்துவமனையில் போட்டு விட்டு மாயமானார்.
தூத்துக்குடி 3வது மைல் பாலிடெக்னிக் பகுதியில் கடந்த 1 மாதமாக 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சுற்று திரிந்தார். மனநிலை பாதிக்கப்பட்டவர் போல இருந்த அவர் அப்பகுதி மக்களிடம் பிச்சை எடுத்து சாப்பிட்டு வந்தார். இரவில் அங்கேயே தங்கி இருந்தார்.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று முன்தினம் மாலை அங்கேயே பிரவசம் ஏற்பட்டது. இதில் அவர் அழகான ஆண்குழந்தையை பெற்றேடுத்தார்.
தாயும், குழந்தையும் மருத்துவ சிகிச்சை இல்லாமல் சாலையோரத்தில் தவித்து வருவதை கண்ட அப்பகுதி மக்கள் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து அவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தனிதனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் சிகிச்சையில் இருந்த அந்த பெண் நேற்று காலை தனது குழந்தையை மட்டும் விட்டு விட்டு திடீரென்று மாயமாகிவிட்டார்.
இதுகுறித்து மருத்துவமனை அதிகாரிகள் தென்பாகம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.