ஜெவுக்கு வந்த ரூ.2 கோடி டிடி-செங்கோட்டையனை விடுவிப்பு இல்லை
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வந்த ரூ.2 கோடி டி.டிக்கள் தொடர்பான வழக்கில் இருந்து செங்கோட்டையனை விடுவிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மறுத்துவிட்டது.
1992ம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா தனது பிறந்தநாளை தடபுடலாகக் கொண்டாடினார். அப்போது அவருக்கு ரூ. 2 கோடி மதிப்புள்ள 89 வங்கி டி.டிக்கள் வந்தன.
முதல்வருக்கு வரும் டிடியை அரசு நிதியில் சேர்க்காத அவர் அதில் 57 டிடிக்களை தனது சொந்த வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்தார். இத்தனைக்கும் அதை அதை அனுப்பியது யார் என்றும் தெரியாது என்றார்.
பரிசு பணத்தை அரசு கஜானாவில் ஒப்படைக்க தவறிய ஜெயலலிதா மீது வருமானவரி துறை, சிபிஐயிடம் புகார் செய்தது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ ஜெயலலிதா, மாஜி மந்திரிகள் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் மீது சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
அப்போது நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்ததால் என் மீது வழக்குத் தொடர சபாநாயகரிடம் அல்லது கவர்னரிடம் அனுமதி பெறவேண்டும் என்றும், இதை செய்ய சிபிஐ தவறியதால் என்னை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றும் செங்கோட்டையன் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீது நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. செங்கோட்டையன் மீது வழக்குத் தொடர சபாநாயகர் அல்லது கவர்னரிடம் அனுமதி பெறத் தேவையில்லை என்று நீதிபதி முகமது இஷாத் அலி தீர்ப்பளித்தார்.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், அரசு பதவி வகிக்கும் ஒருவர் மீது வழக்குத் தொடர முன் அனுமதி பெறத் தேவையில்லை என்று நீதிபதி தனது தீ்ர்ப்பில் கூறினார்.
இதையடுத்து இந்த வழக்கில் இருந்து செங்கோட்டையனை விடுவிக்கப்படமாட்டார்.
-
அரசு இல்லத்திற்கு பை-பை.. ராயப்பேட்டை சொகுசு பங்களாவில் குடியேறினார் எடப்பாடி.. பின்னணி என்ன? -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?











Click it and Unblock the Notifications