திருச்செந்தூர் தொகுதி இடைத் தேர்தல் எப்போது?
சென்னை: காலியாகவுள்ள திருச்செந்தூர் சட்டசபைக்கு அனேகமாக அடுத்த மாதம் இடைத் தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் கம்பம் ராமகிருஷ்ணன், தொண்டாமுத்தூர் கண்ணப்பன் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்து விட்டு திமுகவில் இணைந்தனர்.
அதேபோல இளையாங்குடி கண்ணப்பன் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார். ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வராஜ் மரணமடைந்தார். இதனால் காலியான இந்த ஐந்து தொகுதிகளுக்கும் சமீபத்தில் இடைத் தேர்தல் நடந்தது. ஐந்திலும் திமுக கூட்டணியே வென்றது.
இந்த நிலையில் சமீபத்தில் திருச்செந்தூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் அக்கட்சியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இதையடுத்து எம்.எல்.ஏ. பதவியிலிருந்து விலகிய அவர் திமுகவில் இணைந்தார்.
இதனால் காலியாகவுள்ள திருச்செந்தூர் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்த வேண்டியுள்ளது.
மகாராஷ்டிரா, அருணாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு செப்டம்பர் மாதத்தில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த சமயத்தில் திருச்செந்தூருக்கும் இடைத் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் முதல் வாரத்தில் இதுதொடர்பாக அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தேர்தல் ஆணைய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பொதுத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில், அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட அனிதா ராதாகிருஷ்ணன், திமுக வேட்பாளர் ஜெயசீலனை 13,916 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
அதிமுகவுக்கு 58,600 ஓட்டுக்களும், திமுகவுக்கு 44,684 ஓட்டுக்களும் கிடைத்தன. தேமுதிகவின் கணேசன் 3,756 ஓட்டுக்களைப் பெற்றார்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications