பிராந்தி என நினைத்து விஷ பானம் குடித்த மாணவன் பலி
மதுரை: மதுரை அருகே பிராந்தி என நினைத்து மர்ம பானத்தைக் குடித்த மாணவன் பலியானான். 3 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வாடிப்பட்டிக்கு அருகில் உள்ள டி. மேட்டுப்பட்டியைச் சேர்ந்த அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வந்த மாணவன் குமார்.
இவன், கொழிஞ்சிபட்டி ஓடை பகுதியில் ஒரு பிராந்தி பாட்டில் கிடப்பதை பார்த்து அதை பள்ளிக்கு எடுத்து சென்றிருக்கிறான். அங்கு செல்வகுமார், நாகராஜ், சின்ன நாகராஜ் மற்றும் ராஜா ஆகியோர், குமாரிடம் இருந்த பிராந்தி பாட்டிலை வாங்கிக்கொண்டு பள்ளிக்கு வெளியே இருக்கும் சிறு குன்று பகுதிக்கு சென்று அதை குடித்திருக்கிறார்கள்.
அதைக் குடித்த கொஞ்ச நேரத்தில் நாகராஜூக்கு கடும் வயிற்று வலி வரவே அவன் வீட்டிற்கு சென்றிருக்கிறான். அங்கு அவனுக்கு வாந்தி மயக்கம் வந்ததால் வீட்டில் உள்ளவர்கள் அவனை பாலமேடு மருத்துவமனைக்கு கூட்டி சென்றிருக்கிறார்கள்.
பின்னர் மதுரை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான் நாகராஜு. ஆனால் வழியிலேயே அந்த மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
அவனுடன் சேர்ந்து மர்ம பானத்தைக் குடித்த மற்ற 3 மாணவர்களும் வீட்டில் மயங்கி விழவே, அவர்களும் மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டனர்.
அவர்கள் குடித்தது பிராந்தியா அல்லது பிராந்தி பாட்டிலில் இருந்த பூச்சி மருந்தா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
-
கோடையில் கொட்டும் கனமழை.. அடுத்த 2 நாட்களுக்கு விடவே விடாது.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications