உள்நாட்டு டிக்கெட் முன்பதிவு 15 நாட்களுக்கு ரத்து-ஏர் இந்தியா
டெல்லி: விமானிகளின் வேலை நிறுத்தம் காரணமாக ஏர் இந்தியா நிறுவனம் உள்நாட்டு டிக்கெட் விற்பனைக்கான முன்பதிவை 15 நாட்களுக்கு ரத்து செய்திருப்பதாக அந்நிறுவனத்தின் தலைவர் அரவிந்த் ஜாதவ் தெரிவித்துள்ளார்.
ஊக்க தொகை மற்றும் படிகளை ஏர் இந்தியா நிறுவனம் குறைந்ததை அடுத்து விமானிகள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். இதனால் 46 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் விமானிகளின் சங்கங்களுக்கும் ஏர் இந்தியா தலைவர் அரவிந்த் ஜாதவுக்கும் இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
கடந்த 3 நாட்களில் மட்டும் நிறுவனத்துக்கு சுமார் ரூ. 84 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 180 விமானிகள் தங்களுக்கு உடல்நிலை சரியில்லை என தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் விமானிகளுக்கு கொடுக்கும் படி சுமார் ரூ. 1000 கோடியில் இருந்து ரூ. 1500 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
ரத்தான விமான டிக்கெட்டுகளுக்கு பணத்தை திருப்பி கொடுப்பதற்கு சிறப்பு கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு உதவ பல அதிகாரிகளை அனைத்து விமான நிலையங்களிலும் பணியில் அமர்த்தியுள்ளோம்.
மேலும் 15 நாட்களுக்கான உள்நாட்டு முன்பதிவை ரத்து செய்துள்ளோம் என்றார்.
விமான பயணிகளுக்கு ரயில்-மம்தா...
மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி கூறுகையில்,
ஏர் இந்தியா நிறுவன வேலைநிறுத்தம் காரணமாக பல பயணிகள் கொல்கத்தாவில் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்காக கொல்கத்தா, மும்பை, சென்னை, பெங்களூர், டெல்லி உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
நாளை முதல் செயல்படும் இந்த சிறப்பு ரயில்கள் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் இயக்கப்படும். இதற்காக தனி கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.
அதிவேக ரயில்களில் கூடுதல் பெட்டிகளும் இணைக்கப்படும். அந்தமானி தீவில் இருப்பவர்களுக்கு உதவும் வகையில் சிறப்பு கப்பல் சேவைக்கு ஏற்பாடு செய்யுமாறு கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர் முகுல் ராயிடம் கேட்டு கொள்கிறேன் என்றார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications