புற்று நோய்-திமுக வந்தவாசி எம்.எல்.ஏ கவலைக்கிடம்
வந்தவாசி: புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள வந்தவாசி தொகுதி திமுக எம்.எல்.ஏ ஜெயராமன் மிகவும் கவலைக்கிடமாக உள்ளார்.
வந்தவாசி தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.பி.ஜெயராமன். அவருக்கு. 60 வயதாகும் இவருக்கு 8 மாதங்களாக இரைப்பையில் புற்றுநோய் ஏற்பட்டு, சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த வாரம் அவரது உடல் நிலை மோசமானதால் சென்னை தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
நேற்று மாலை 5 மணிக்கு ஜெயராமன் உடல் நிலை மோசம் அடைந்தது. சிகிச்சை அளித்தும் பலன் இல்லாததால், அவருடைய மகன் கமலக்கண்ணன், ஜெயராமனை அவரது சொந்த ஊருக்கு கொண்டு வர முடிவு செய்தார்.
இதையடுத்து செய்யாறு தாலுகா அனக்காவூர் ஒன்றியம் செங்காடு கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று இரவு ஜெயராமனை அழைத்து வந்தனர்.
ஏராளமான பொதுமக்கள், கட்சிப் பிரமுகர்கள் ஜெயராமனை பார்த்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.