கிங்பிஷர் விமானத்தில் நாட்டு வெடிகுண்டு வைத்தவர் கைது

கடந்த 21ம் தேதி பெங்களூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சென்ற கிங்ஃபிஷர் பயணிகள் விமானத்தில் நாட்டு வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம், விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பாதுகாப்பு கட்டுப்பாடுகளை மீற வெடிப்பொருளை விமானத்துக்குள் கொண்டுபோய் வைத்தவர் யார் என போலீசாரும், மத்திய தொழில்பாதுகாப்பு படையினரும் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
விமானத்தில் பயணம் செய்தவர்கள், திருவனந்தபுரம் மற்றும் பெங்களூர் விமான நிலையத்தில் பணிபுரிவோர் என பலரையும் சந்தேக வலைக்குள் கொண்டுவந்து சிசிடிவி பதிவுகள் மூலமாகவும் பல்வேறு வழிமுறைகளிலும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தனியார் சரக்கு போக்குவரத்து ஏஜென்சி நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர் ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
போலீசாரின் தீவிர விசாரணையில் விமானத்தில் நாட்டு வெடிகுண்டு வைத்தது அவர் தான் எனத் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுபற்றி போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுவதாவது: இப்போதைக்கு கைது செய்யப்பட்டவரின் பெயரை வெளியிட முடியாது. முறைப்படியான அறிவிப்பு விரைவில் வரும். ஆனால் இந்த வழக்கில் துப்பு துலங்கிவிட்டது.
இந்த விவகாரத்தில் தீவிரவாதிகள் யாரும் சம்பந்தப்படவில்லை. பிடிபட்ட நபர் தனியார் 'கார்கோ' நிறுவனத்தில் வேலை பார்ப்பவர். திருவனந்தபுரம் புறநகர் பகுதியில் வசிப்பவர்.
தற்போது அவர் போலீஸ் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளார். அவர் எதற்காக நாட்டு வெடிகுண்டை வைத்தார் என்ற தகவல் எல்லாம் விரைவில் வெளியாகும் எனக் கூறினர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications